இரவில் குலுங்கிய இந்தோனேசியா.. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த மக்கள்
ஜகர்தா: இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்தோனேசியா பூமியின் டெக்டோனிக் தட்டுகள் நகர்வு அதிகம்கொண்ட இடத்தில் அமைந்துள்ளது. இதனால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தீவு நாடான இந்தோனேசியா அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அந்த நாட்டின் சுமத்ரா தீவில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பேரழிவை இந்த சுனாமி ஏற்படுத்தியது. வடக்கு சுமத்ரா கடலுக்குள் ஏற்பட்ட மிகப் பெரும் நிலநடுக்கம் அதாவது ரிக்டர் அளவில் 9.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் மிக பயங்கரமான சுனாமி பேரலைகளை உருவாக்கியது.
இந்தோனேசியா தொடங்கி இந்தியா வரை மிகப் பெரும் பேரழிவுக்குள்ளாக்கியது இந்த 2004 சுனாமி. இந்த சுனாமி பேரழிவால் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்திருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் நிலைமையே என்ன என தெரியாமல் கடலோடு கடலாக கரைந்து போயினர்.
இந்த பேரழிவுக்கு பிறகு இந்தோனேசியாவில் நிலநடுக்கம் என்றாலே ஒரு வித அச்சம் தெற்காசிய நாடுகளில் ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், இந்தோனேசியாவில் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. இந்தோனேசியாவின் வடக்கு பபுவா மாகாணத்தில் உள்ள ஜெயபுரா நகரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள் குலுங்கின.
இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பின் அதிர்வுகள் ஏற்படும் என்றும் எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்றும் அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications