பாரீஸ் தாக்குதல்களின் முக்கிய மூளையான அப்துல் ஹமீத் போலீஸ் சோதனையின்போது தற்கொலை?
பாரீஸ்: பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையாக இருந்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாத் தற்கொலை செய்து கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் 129 பேர் பலியாகினர். இதையடுத்து பாரீஸின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தப்பியோடிய தீவிரவாதிகளை தேடி வருகிறார்கள்.

புதன்கிழமை பாரீஸின் புறநகர் பகுதியான செயின்ட் டெனிஸில் உள்ள ஒரு வீட்டை நூறு போலீசாரும், ராணுவத்தினரும் சூழ்ந்தனர். அப்போது வீட்டில் இருந்த தீவிரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும், ராணுவத்தினரும் தீவிரவாதிகளை நோக்கி சுட்டனர்.
இதில் போலீசார் சிலர் காயம் அடைந்தனர். வீட்டில் இருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பெண் தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இந்நிலையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்துகையில் வீட்டில் இருந்த பாரீஸ் தாக்குதல்களுக்கு முக்கிய மூளையான பெல்ஜியத்தைச் சேர்ந்த அப்துல் ஹமீத் அபாத் தற்கொலை செய்து கொண்டதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் பிரான்காய்ஸ் ரிச்சியர் உறுதி செய்துள்ளார்.
நேற்றைய சோதனைகளின்போது செயின்ட் டெனிஸ் பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து பிரான்காய்ஸ் கூறுகையில்,
அப்துல் ஹமீத் தற்கொலை செய்து கொண்டார் என்பதை உறுதி செய்யும் தகவல் எனக்கு கிடைத்துள்ளது. இது குறித்து என்னிடம் எந்த ஆவணமும் இல்லை என்றார்.
மரபணு பரிசோதனையின் மூலம் தான் ஹமீத் இறந்தது உறுதி செய்யப்படும். ஆனால் அதற்கு கால அவகாசம் ஆகும் என்று கூறப்படுகிறது. குண்டுகளை வெடிக்கச் செய்து இறந்த பெண் ஹமீதின் சகோதரி ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications