குகைக்குள் பயமாக இருந்தது.. நாங்கள் மீண்டதே பெரிய அதிசயம்.. தாய்லாந்து சிறுவர்கள் உருக்கம்
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
Recommended Video

பாங்காக்: தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட 12 சிறுவர்களும் தற்போது நிருபர்களுக்கு பொது நிகழ்ச்சியில் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.
தி தம் லுஅங் எனப்படும் தாய்லாந்தில் இருக்கும் குகைக்குள் இரண்டு வாரம் முன் பள்ளி சிறுவர்கள் சிக்கினார்கள். இந்த குறுகலான குகைக்குள் 2 வாரம் முன்பு தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். விளையாட்டு சுற்றுலா சென்ற இவர்கள் 17 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருந்தனர்.
பல போராட்டத்திற்கு பின் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு பணி முழு வெற்றி பெற்றுள்ளது.தாய்லாந்து குகையில் சிக்கியவர்களில் அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். குகையில் சிக்கிய 12 சிறுவர்கள், 1 பயிற்சியாளர் உட்பட அனைவரும் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

நல்ல உடல்நிலை
இந்த சிறுவர்கள் எல்லோரும் இப்போதும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள். நிமோனியா இருந்த இரண்டு சிறுவர்களும் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறார்கள். அதேபோல் முதலில் வெளியேறிய வீரர்கள் எல்லோரும் வீட்டிற்கு திரும்பும் நிலைக்கும் தயாராகி உள்ளனர். 25 வயது பயிற்சியாளரும் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்.

முன்னோக்கி செல்லும் தாய்லாந்து நிகழ்ச்சி
இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் முதல்முறையாக, தொலைக்காட்சி முன்னிலையில் தோன்றி இருக்கிறார்கள். இன்று மாலை நடந்த நிகழ்ச்சியில் அவர்கள் தோன்றி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ''தாய்லாந்து மூவ்ஸ் பார்வர்ட்'' என்று ''முன்னோக்கி செல்லும் தாய்லாந்து'' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.

பெரிய நிகழ்ச்சி
இந்த நிகழ்ச்சியை சிறிய அளவில்தான் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் உலகின் உள்ள பல முக்கியமான பத்திரிக்கையாளர்கள் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட தாய்லாந்து வந்திருக்கிறார்கள். அதேபோல் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய கணக்குப்படி இந்த நிகழ்ச்சி மாலை நான்கு மணிக்கு தொடங்கியது.

என்ன பேசினார்கள்
இந்த நிகழ்ச்சியில் பயமுறுத்தும் வகையில் கேள்வி கேட்க கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. சிறுவர்கள் எல்லோரும், பள்ளி கால்பந்து அணி உடையில் நிகழ்ச்சிக்கு வந்து இருந்தனர். அதேபோல், கால்பந்து அணியின் பயிற்சியாளரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார், மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

சிறுவர்கள் அளித்த பேட்டி
சிறுவர்கள் அளித்த பேட்டியில், குகைக்குள் பயமாக இருந்தது. நாங்கள் மீள்வோம் என்று நினைக்கவே இல்லை. எல்லாம் பெரிய அதிசயம் போல நடந்து இருக்கிறது. நாங்கள் இப்போது உங்கள் முன் பேசுவதே ஆச்சர்யமான விஷயம் தான். எங்கள் உயிரை காப்பற்ற போராடிய எல்லோருக்கும் நன்றிகள் என்று தன்னம்பிக்கை மாறாமல் பேசி இருக்கிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications