இது என்ன திடீருன்னு.. பாகிஸ்தான் எல்லையிலுள்ள இந்திய மாநிலங்களுக்கு போகாதீர்கள்.. கனடா வார்னிங்
ஒட்டாவா: பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாகிஸ்தான் எல்லை இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு குடிமக்களுக்க்கு அறிவுறுத்தியுள்ளது.

செல்ல வேண்டாம்
கனடாவில் இந்திய வம்சாவளி மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அதேபோல், கனடா நாட்டு மக்களும், சுற்றுலாவுக்காக இந்தியாவுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலாப்பயணிகள் எந்தெந்த நாடுகளுக்கு செல்ல வேண்டாம்.. எங்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது குறித்து ஓவ்வொரு நாடும் தங்கள் வெளியுறவுத்துறை அமைச்சக இணையத்தில் அறிவுறுத்தல்களை பகிர்ந்து வருகிறது.

கனடா வெளியுறவு அமைச்சகம்
அந்த வகையில், கனடா அரசு இணையத்தளத்தில் நேற்று (செப்டம்பர் 28) பயண அறிவுறுத்தல் ஒன்று அப்டேட் செய்யப்பட்டு இருந்தது. அதில், பாகிஸ்தானுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகள் இருக்கும் அபாயம்
இந்த பயண அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:- கணிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு சூழல் நிலவுவதாலும் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்கள் இருக்கும் அபாயமும் இருப்பதால் பாகிஸ்தானுடனான எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்களான குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எல்லையை ஒட்டி 10 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதிகளுக்கு பயணிப்பதை தவிர்த்து விட வேண்டும்.

பயணத்தை தவிர்க்க வேண்டும்
அதேபொல், நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறும் அச்சுறுத்தல் உள்ளது. இதனால் இந்தியா செல்லும் கனடா மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதேபோல், பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிக்குழுக்கள் அபாயம் இருப்பதால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர் மாநிலங்களுக்கும் அவசியமற்ற பயணத்தை தவிர்த்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த விழிப்புடன்
முன்னதாக கடந்த 23 ஆம் தேதி கனடாவில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் ஒன்று வெளியிடப்பட்டு இருந்தது. அதில், கனடாவில் சமீப காலமாக வெற்று தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு செல்லும் இந்திய மாணவர்கள் மிகுந்த கவனமுடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். அதேபோல், தூதரகங்களில் தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications