இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பிரம்மாண்ட பேரணி!!
ஜெருசலேம்: காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நேற்று இரவு நடத்தப்பட்டது. போராட்டத்தின் முடிவில் இஸ்ரேலிய போலீசாருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
காஸாவை ஆக்கிரமித்து தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இத்தாக்குதல்களில் 800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள்.

மேலும் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர். இந்த நிலையில் இஸ்ரேலின் கொடூர தாக்குதலைக் கண்டித்து பாலஸ்தீனத்தின் தலைநகரான ரமல்லாவில் இருந்து ஜெருசலேம் நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும் என்று சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த அழைப்பை ஏற்று பல்லாயிரக்கணக்கானோர் ஜெருசலேம் நோக்கி நேற்று இரவு பேரணியாக சென்றனர். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படியான பிரம்மாண்ட பேரணி நேற்றுதான் பாலஸ்தீனத்தில் நடைபெற்றுள்ளது.
ஜெருசலேத்தில் உள்ள புனித தலங்களில் ஒன்றான அல் அக்சா மசூதி நோக்கி இப்பேரணி சென்றடைந்தது. அப்போது குலாண்டியா என்ற சோதனைச் சாவடியை பேரணியாக சென்ற பாலஸ்தீனர்கள் கடக்க முயன்றனர். இன்னும் சிலர் மசூதியை ஒட்டி இஸ்ரேல் கட்டி வைத்திருக்கும் பிரம்மாண்ட பல அடி உயர தடுப்பு சுவரை உடைக்க முயற்சித்தனர்.
ஆனால் இஸ்ரேல் போலீசார் அல் அக்சா மசூதிக்குள் பாலஸ்தீனர்கள் நுழைவதைத் தடுத்து தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பாலஸ்தீனர்கள் இருவர் பலியாகினர். இந்த பேரணியால் பாலஸ்தீனம் -இஸ்ரேல் இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications