பிரிட்டன்- இந்தியா மாநாடு: 4 வருடத்தில் பெரிய வளர்ச்சி.. நிதி ஆயோக் துணை தலைவர் பேச்சு!
லண்டன்: இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டத்தில் இன்று நிதி ஆயோக்கின் துணை தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் பேசினார். கடந்த 4 வருடத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் குறித்து பேசினார்.
பிரிட்டனில் கடந்த 18-ஆம் தேதி வர்த்தகம், அரசியல் மற்றும் பொது விவகாரம் தொடர்பாக இந்தியா- பிரிட்டன் இடையே உயர்நிலை கூட்டம் தொடங்கியது.வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டம் லண்டனில் தாஜ் பக்கிங்ஹாம் கேட் ஹோட்டலில் நடைபெறுகிறது. இன்று நடக்கும் நிகழ்வின் அட்டவணை வெளியாகி உள்ளது.

இதில் இன்று மாலை நடந்த நிகழ்வில் நிதி ஆயோக்கின் துணை தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் பேசினார். கடந்த 4 வருட மோடி ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்து பேசினார். மேலும் பொருளாதரா முன்னேற்றம் குறித்தும் பேசினார்.
அதில், இந்தியாவில் நாம் தொழிலையும், வியாபாரத்தையும் நடத்தும் விதம் முழுக்க முழுக்க மாறிவிட்டது. நம்முடைய அரசு பெரிய அளவில் மாறிவிட்டது. இங்கு வியாபாரம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது, நம்முடைய குறைபாடுகளை கவனிப்பதே ஆகும். எடுத்துக்காட்டாக விவசாயத்தை கூறலாம்.
#NewsFromNITI: VC @Rajivkumar1 speaking at the Fifth Annual UK-India Leadership Conclave'18 about four years of the PM @narendramodi govt, trajectory of the Indian economy and how the Indian govt's policies & unique approach to governance is #TransformingIndia #UKIndiaWeek2018 pic.twitter.com/BJiYbd1jFJ
— NITI Aayog (@NITIAayog) June 20, 2018
இந்தியாவின் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் வகையில், நிறைய விஷயங்கள் கடந்த 4 வருடத்தில் நடந்து இருக்கிறது. நாம் மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பவர்களின் கோரிக்கைகளை நான் பிரதமரிடம் எடுத்துரைப்பேன்.
உள்ளாட்சி அமைப்புகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள்தொடங்கி விட்டோம். இந்த குளிர்காலத்தில் டெல்லியில் காற்றின் தரம் சற்றே மேம்பட்டிருக்கும்.நாங்கள் முன்பு இருந்து திட்டக் கமிஷனையும், அதன் 5 ஆண்டுத்திட்டத்தையும் நீக்கி விட்டோம். நிதி ஆயோக் வெறும்யோசனைகளை மட்டும் சேகரிக்காது, இந்த யோசனைகளை செயல்படுத்தவும் பாடுபடுகிறது.
பிரதமர் மோடியின் இந்த ஆட்சியின் கீழ் நாம் மிக முக்கியமான மாற்றம் ஒன்றை காணப்போகிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய பொருளாதரம் பெரிய அளவில் மாற உள்ளது. இப்போது முதலீடு செய்வது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம், ஆனால் அது மாறிக்கொண்டு இருக்கிறது, என்றுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications