சாவுக்கு பிறகு விமானம் அனுப்பி என்ன பயன்? - உக்ரைனில் சிகிச்சை பெறும் இந்திய மாணவர் கேள்வி
கீவ்: உக்ரைனில் குண்டடிப்பட்டு சிகிச்சையில் இருக்கும் இந்திய மாணவர், தன்னை இந்தியாவுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அங்குள்ள மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அண்டை நாடுகளுக்கு சென்று வருகிறார்கள்.
அப்படி உக்ரைனைவிட்டு வெளியேறும் போது, இந்திய மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு குண்டடிபட்டது.

உக்ரைன்
கீவ் நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இந்திய மாணவர் ஹர்ஜோத் சிங், இதுகுறித்து தொலைபேசி வழியாக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ''உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் நாங்கள் இங்கிருந்து வெளியேற முயற்சி செய்து வந்தோம். உக்ரைனிலிருந்து வெளியேறுவதற்காக சக மாணவர்களுடன் எல்லையை நோக்கிச் சென்றோம்.

தாக்குதல்
அப்போது பாதுகாப்புக் காரணங்களுக்காக எங்களை வந்த வழியாகவே, திரும்பிச் செல்லுமாறு உக்ரைன் வீரர்கள் கூறினார்கள். இதனால் நாங்கள் மீண்டும் கீவ் நகர் நோக்கி சென்றோம். நாங்கள் திரும்பும் வழியில் எங்கள் கார் மீது துப்பாக்கியால் சிலர் சுட்டனர். அதில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து எனக்குக் காயம் ஏற்பட்டது. அதையடுத்து கீவ் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன்.

மறுபிறவி
நெஞ்சில் குண்டு பாய்ந்திருந்தது. அதை மருத்துவர்கள் எடுத்து, எனக்கு தொடர் சிகிச்சை கொடுத்தனர். சிகிச்சைக்குப் பின்னர் மறு பிறவி கிடைத்தது போல் உள்ளது. என் சாவுக்குப் பிறகு மீட்பு விமானம் அனுப்புவதில் எந்தப் பலனும் இல்லை. கடவுள் எனக்கு இரண்டாவது பிறவி தந்துள்ளார். மறுபிறவி எடுத்து வந்துள்ளேன். என்னை இங்கிருந்து வெளியேற்ற உதவும்படி இந்தியத் தூதரகத்தை கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர்
உக்ரைனில் ஏற்கெனவே இந்திய மாணவர் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்நிலையில், மற்றொரு மாணவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரைப் போல பலரும் உக்ரைனில் சிக்கி இருக்கிறார்கள். உக்ரைனின் கீவ் நகரில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என்று மத்திய
சாலை போக்குவரத்து இணை அமைச்சர் வி.கே.சிங் உறுதி செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications