ஷாங்காய் கூட்டமைப்பு மாநாடு- மாஸ்கோவில் பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங்
Subscribe to Oneindia Tamil
மாஸ்கோ: ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றடைந்துள்ளார்.
மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்கிறார்.

இதற்காக 3 நாட்கள் பயணமாக மாஸ்கோ சென்றடைந்தார் ராஜ்ஸ்நாத்சிங். மாஸ்கோ விமான நிலையத்தில் மேஜர் ஜெனரல் புக்டீவ் யூரி நிகோலாவிக், ராஜ்நாத்சிங்கை வரவேற்றார்.
அத்துடன் ரஷ்யாவுடன் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் ராஜ்நாத்சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எல்லையில் சீனாவுடனான பதற்றம் நீடிக்கும் நிலையில் ராஜ்நாத்சிங்கின் ஷாங்காய் கூட்டமைப்பு பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மாநாட்டில் சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரும் பங்கேற்பார் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications