உலகம் பார்த்திராத ஒசாமாவின் சடலப் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்த யு.எஸ். வீரர்
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனின் குண்டு துளைத்த சடலத்தின் புகைப்படத்தை பத்திரமாக வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள அப்போத்தாபாத் வீட்டில் பதுங்கியிருந்த அல் கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த வீரர் ராப் ஓ நீல் மற்றும் மேத்யூ பிசோனெட் ஆகியோர் சுட்ட குண்டுகள் தான் ஒசாமா மீது பாய்ந்து அவர் இறந்தார்.

ஒசாமா கொல்லப்பட்டது குறித்து மேத்யூ பிசோனெட் 'நோ ஈஸி டே' என்ற புத்தகத்தை எழுதி பிரபலம் ஆனார். ஒசாமா கொல்லப்பட்டபோதும் சரி, அவரது உடல் கடலில் புதைக்கப்பட்டபோதும் சரி புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அந்த புகைப்படங்கள் வெளியானால் பிரச்சனை ஏற்படும் என்று நினைத்து ஒபாமா நிர்வாகம் அவற்றை வெளியிடவில்லை.
இந்நிலையில் பிசோனெட் குண்டுகள் துளைக்கப்பட்ட ஒசாமாவின் சடலப் புகைப்படம் ஒன்றை இத்தனை ஆண்டுகளாக அனுமதியின்றி பத்திரமாக வைத்திருந்திருக்கிறார். தன் மீது எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டு அந்த புகைப்படம் அடங்கிய ஹார்டு டிரைவை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.
இது குறித்து கடற்படை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications