2025க்குள் 5வது மிகப் பெரிய அணு ஆயுத நாடாக உருவெடுக்குமாம் பாகிஸ்தான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அணு ஆயுதம் வைத்திருக்கும் மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் 5-வது இடத்துக்கு வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தான் முன்னேறும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் 90 முதல் 110 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும் தற்போது 110 முதல் 130 வரை அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அணு ஆயுத நோட்புக் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.

US says Pakistan will become 5th largest nuke power by 2025

மேலும் இந்த எண்ணிக்கை வருகிற 2025 ஆம் ஆண்டு 220 முதல் 230 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அப்படி உயரும்பட்சத்தில் உலகில் அதிக அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் பாகிஸ்தான் 5வது இடத்துக்கு முன்னேற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பாகிஸ்தானிடம் 6 வகையான அணு ஆயுதங்கள் உள்ளன. இவை தவிர குறைந்த தொலைவை குறிவைத்து தாக்கும் இலக்கினைக் கொண்ட ஷாஹீன் 1ஏ, மீடியம் ரேஞ்ச் வகையிலான் ஷாஹீன் - 3 வகையிலான ஏவுகணைகளை தற்போது பாகிஸ்தான் சோதனை நடத்தி வருகிறது. இதுதவிர பாகிஸ்தானிடம் ஹாட்ப்-7 ரக அணு ஆயுத ஏவுகணைகளும் உள்ளன.

பாகிஸ்தான் அணுஆயுத தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+