"சவப்பெட்டியை" திடீர்னு எட்டி உதைத்த "சடலம்".. கல்லறையில் கண்ணசைத்து.. ஒரே பரபரப்பு.. தெறித்த கூட்டம்
சவப்பெட்டியில் இருந்த சிறுமி திடீரென கண்விழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
மெக்சிகோ சிட்டி: கல்லறையில் திடீரென சடலம் கண் அசைந்ததால், திக்குமுக்காடி போய்விட்டனர் குடும்பத்தினர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?
இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன..
இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும்.

ஆக்ஸிடென்ட்
இதுபோன்ற சம்பவங்கள் வெளிநாடுகளில் நிறைய நிகழும்.. இப்படித்தான் ஒருமுறை, பெரு நாட்டிலும் சம்பவம் நடந்தது.. லம்பெகியூ பகுதியை சேர்ந்தவர் ரோசா இசபெல் சிஸ்பெடி காலஹா.. ரோசாவுக்கு 36 வயதாகிறது.. கடந்த 26-ம் தேதி இவரது கார் விபத்துக்குள்ளாகியது.. காரில் இருந்தவர்கள் அனைவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டனர்.. அப்போது ரோசாவும் இன்னொரு நபரும் இறந்துவிட்டதாக பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.

கல்லறை + சவப்பெட்டி
இதனால் 2 பேருக்கும் இறுதி சடங்கு செய்ய முடிவானது.. அதற்காக சவப்பெட்டியை தயார் செய்து, அதில் ரோசா சடலத்தையும் தூக்கி வைத்தனர்.. பிறகு, சவப்பெட்டியை மூடி, கல்லறைக்கு கொண்டு வந்தனர்.. அடக்கம் செய்யலாம் என்று சவப்பெட்டியை திறக்க முயன்றபோது, சவப்பெட்டி திடீரென அசைந்தது.. இதனால் அதிர்ந்து போன உறவினர்கள், சவப்பெட்டியை திறந்து பார்த்தபோது, ரோசா டக்கென கண்விழித்துள்ளார்..

ரோசா + சடலம்
இதனால் உறவினர்கள் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்தனர்.. முதலிலேயே ஒழுங்காக பரிசோதித்து சிகிச்சை தந்திருந்தால், ஒரு உயிர் அநியாயமாக பறி போயிருக்காதே என்று கொந்தளித்து அந்த டாக்டருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். உண்மையிலேயே அப்போது ரோசா கோமாவில் இருந்துள்ளார்.. அப்போது அவருக்கு உயிர் இருந்துள்ளது.. மறுபடியும் ரோசாவின் சடலத்தை அதே இடத்தில் கொண்டு போய் அடக்கம் செய்தனர் உறவினர்கள்..!

பதற்றம்
அதுபோலவே இன்னொரு சம்பவம் மெக்சிகோவில் நடந்துள்ளது.. அந்த நாட்டை சேர்ந்தவர் காமிலா ரோக்சானா மார்டினேஸ்.. 3 வயது குழந்தை.. கொஞ்ச நாட்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறாள்.. இதைதவிர, காய்ச்சல், வாந்தி ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி சேர்த்துள்ளனர்... டாக்டர்களும் குழந்தையை பரிசோதித்துவிட்டு, மாத்திரைகள் தந்துள்ளனர்.. ஆனாலும், காமிலாவுக்கு உடல் நிலை மோசமடைந்ததோடு, கொஞ்ச நேரத்தில் சுயநினைவும் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஐசியூ
இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக, ஐசியூவில் சேர்த்துள்ளனர்.. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில், காமிலா உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் மருத்துவமனை தெரிவித்துள்ளது... இதையடுத்து, இறுதிச்சடங்கு நடந்துள்ளது.. காமிலாவின் உடலை சவப்பெட்டியில் வைத்து இறுதிச் சடங்கு நடந்து கொண்டிருந்தது.. அந்தநேரம் யாரும் எதிர்பாராதவகையில், காமிலாவின் கண்களில் திடீரென அசைவு தென்பட்டதை கண்டு அதிர்ந்தனர்..

போஸ்ட் மார்ட்டம்
பிறகு, காமிலா உயிருடன் இருப்பதை அறிந்து, இறுதிசடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.. குழந்தை இன்னும் சாகவில்லை, உடனே தூக்குங்க.. டாக்டர் கிட்ட போகலாம்" என்று பதறிக்கொண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர்.. காமிலாவின் பெற்றோரோ, பதற்றத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர். தங்களுக்கு உயிரே திரும்பி வந்துவிட்டது உணர்ந்தனர்.. அவசரம் அவசரமாக மறுபடியும் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், மருத்துவமனையில் காமிலா நிஜமாகவே இறந்துவிட்டாள்..

"ஆப்பு" ஆன்தி வே
இதனால், குடும்பத்தினர் இதயம் வெடித்து கதறி அழுதனர்.. சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.. முதலிலேயே மருத்துவமனை டாக்டர்கள் ஒழுங்காக கவனித்திருந்தால், சிகிச்சை தந்திருந்தால் குழந்தை உயிர்பிழைத்திருப்பாளே என்று கதறி அழுகிறார்கள் பெற்றோர்.. இத்தனைக்கும் ஐசியூவில் இவ்வளவு அஜாக்கிரதையா? என்று அதிர்ந்து போய் கேட்கிறார்கள்.. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அந்த ஆஸ்பத்திரிக்கு "ஆப்பு" ஆன்தி வே-யில் இருப்பதாக தெரிகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications