பிரான்ஸில் கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்கள்... மூச்சுத் திணறி 7 பலி
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்: பிரான்சில் கரை ஒதுங்கிய 10 திமிங்கலங்களில், 7 திமிங்கலங்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் காலைஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் 10 திமிங்கலங்கள் உயிருடன் கரை ஒதுங்கின. பின்னர் உயிருக்காக போராடிய நிலையில் உள்ள இவற்றை மீட்க மீட்பு குழுவினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.

அவற்றை கடலில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே 7 திமிங்கலங்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தன. மூன்று திமிங்கலங்கள் பத்திரமாக கடலில் கொண்டு சேர்க்கப்பட்டன.
இந்த 10 திமிங்கலங்களும் ஒரே குடும்பத்தை சார்ந்தவையாக இருக்கலாம் என்றும், அவை கடலில் இடம்பெயரும் போது, கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும், இந்த பகுதியில், இது போன்று திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது, கடந்த 30 ஆண்டுகளில் இதுவே முதன்முறை எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications