Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்தியா எங்களுக்கு ரொம்ப முக்கியம்!" சொல்வது கனடா டாப் அமைச்சர்! ஏன் இந்த திடீர் மாற்றம்?

Subscribe to Oneindia Tamil

ஒட்டாவா: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் தொடரும் நிலையில், கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் பில் பிளேயர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்தியா- கனடா உறவு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதே இதற்குக் காரணமாகும்.

 What Canada Defense Minister Bill Blair said about India Canada ties amid Khalistani terrorist row

இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கனடா தனது குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இருப்பினும், கனடா ஆதாரங்களை வெளியிடாமல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து வருகிறது.

இந்தியா கனடா: இதனால் இரு நாட்டு உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த பரபர குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன்பு, இந்தியாவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் குடியேற்றம் ஆகியவற்றில் நீண்ட மற்றும் நல்லுறவைக் கனடா வைத்திருந்தது. குறிப்பாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை மேலும் எளிமையாக்கப் பேச்சுவார்த்தைகளும் கூட நடத்தப்பட்டன.

இதற்கிடையே சர்வதேச ஊடகத்திற்குப் பேட்டி அளித்த அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவை "முக்கியமானது" என்று கூறிய அவர், குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஒரு பக்கம் தொடரும் நிலையில், ​​கனடா இணைந்து பணியாற்றுவது தொடரும் என்றும் பிளேயர் தெரிவித்தார்.

முக்கியமானது: தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவுடனான எங்கள் உறவு இப்போது ஒரு சவாலாக இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்தியா உடனான உறவு எங்களுக்கு முக்கியமானது. ஆனால் அதே நேரத்தில், சட்டத்தைப் பாதுகாத்து எங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.

அதே நேரத்தில் நாங்கள் ஒரு முழுமையான விசாரணையை நடத்தி உண்மையைப் பெறுவதற்கும் எங்களுக்குப் பொறுப்பு உள்ளது.. இப்போது விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உண்மையை நாங்கள் நிச்சயம் கண்டறிவோம். குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் அது பெரிய பிரச்சினை தான். ஏனென்றால் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஒருவரைக் கொன்றது என்பது எங்கள் இறையாண்மையை மீறும் செயலாகும்.

மேலும் இந்தோ-பசிபிக் பகுதிகளில் கனடாவின் இருப்பு இன்னும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ இருப்பை அதிகரிக்கவும் ரோந்து பணிகளை அதிகரிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

இரு நாட்டு உறவு: இந்த விவகாரம் தொடங்கியது முதலே இந்தியா கனடா நாடுகள் மாறி மாறி பதிலடி கொடுத்து வருகிறது. முன்னதாக கடந்த வியாழக்கிழமை தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் இந்திய எதிர்ப்புச் சக்திகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையைக் கனடா எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்துள்ளது.

முதலில் இரு நாடுகளும் மாறி மாறி தூதர்களைத் திருப்பி அனுப்பினர். அடுத்து மாறி மாறி தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டனர். கனடா நாட்டவருக்கு மறு அறிவிப்பு வரும் வரை விசா வழங்கப்போவது இல்லை என்று இந்தியா அறிவித்தது. இந்தச் சூழலில் தான் கனடா பாதுகாப்புத் துறை அமைச்சர் திடீரென இப்படிப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+