இஸ்ரேலுக்கு மரண அடி..  ஈரான் ஏவிய Fatttah 1 ஏவுகணை! அயன்டோமால் கூட தடுக்க முடியாதாம்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேலை தாக்கி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேல் மீது ஃபட்டா I ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வைத்து ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த ஏவுகணையை இஸ்ரேலின் அயன்டோமால் கண்டுபிடித்து அழிக்க முடியாது என்பதால் இஸ்ரேலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி பயங்கரமாக தாக்கி வருகின்றனர். இதனால் உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - காசாவை தொடர்ந்து புதிதாக இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வெடித்துள்ளது.

இதனை ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‛‛இஸ்ரேலியர்களுக்கு கருணை காட்ட வேண்டாம். போர் தொடங்கிவிட்டது. இனி மன்னிப்பு கிடையாது'' என்று கூறியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தான் நேற்று இரவு இஸ்ரேல் மீது ஈரான் தனது பிரமாஸ்திர ஏவுகணையை பயன்படுத்தி உள்ளது. ஈரானில் இருந்து ஃபத்தா-1 (Fattah I) ஏவுகணை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதான் தற்போது இஸ்ரேலுக்கு பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது.

இந்த ஏவுகணை தான் ஈரானின் முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணையாகும். 2023ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஏவுகணைக்கு ஃபத்தா I என்று அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தான் பெயர் வைத்தார். இந்த ஃபத்தா I ஹைப்பர்சோனிக் ஏவுகணை மிகவும் ஆபத்தானது. இந்த ஏவுகணை ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்ல கூடியது. மாக் 5 வேகத்தில் மணிக்கு 6,100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது.

இந்த ஏவுகணை 12 மீட்டர் நீளம் கொண்டது. 1,400 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இது திட எரிபொருளில் இயங்குகிறது. 200 கிலோ வெடிபொருட்களை சுமந்து செல்லும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணையை ஒருமுறை வானில் ஏவிய பிறகு பாதிவழியில் அதன் பாதையை மாற்ற முடியும்.

இது இஸ்ரேலின் வான்வெளி தடுப்பு பாதுகாப்பு அமைப்பான அயன்டோமுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேலின் அயன்டோமால் இந்த ஏவுகணையை வானில் அழிக்க முடியாது.

அயன்டோமில் இருந்து இந்த ஃபத்தா I ஹைப்பர்சோனிக் ஏவுகணையால் தப்பித்து இலக்கை தாக்கி அழிக்க முடியும். இந்த ஏவுகணையை ஈரான் உருவாக்க முக்கிய காரணமே இஸ்ரேல் தான். இஸ்ரேலின் அயன்டோம், Arrow வான்வெளி பாதுகாப்பை தாண்டி அந்த நாட்டை தாக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேகமாக இது தயாரிக்கப்பட்டது. ஈரானில் இந்த ஏவுகணைக்கு ‛இஸ்ரேலை தாக்கும் ஏவுகணை' என்ற மற்றொரு பெயரும் உண்டு.

மேலும் இஸ்ரேல் மீது இந்த ஃபத்தா 1 ஏவுகணையை ஈரான் பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு 2024 அக்டோபர் 1ம் தேதி இஸ்ரேல் மீது இந்த ஏவுகணையை பயன்படுத்தி ஈரான் கொடூர தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு இப்போது மீண்டும் இந்த ஏவுகணையை வைத்து இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கி உள்ளது.

ஆனால் தற்போதைய தாக்குதலின்போது ஒரு ஃபத்தா I ஏவுகணைகளில் ஒன்றை தவிர மற்ற அனைத்தையும் இடைமறித்து அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஃபத்தா I ஹைப்பர் சோனிக் ஏவுகணையை தடுத்து அழிக்கும் வான்வெளி பாதுகாப்பு அமைப்புக்கு இஸ்ரேலில் விரைவில் தட்டுப்பாடு ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாடு வரும் பட்சத்தில் இஸ்ரேல் இப்போது உள்ளதை விட பெரும் சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+