5 லட்சம் உயிரிழப்புகள்.. வேக்சின் இருந்தும் ஓமிக்ரான் ஆட்டம்.. ஈஸியா நினைக்காதீங்க.. ஹூ முக்கிய அலர்ட்
ஜெனீவா: ஓமிக்ரான் வைரசால் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். பல நாடுகள் இன்னும் ஓமிக்ரானின் உச்சத்தை கடக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருவதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
அந்த வகையில் சமீபத்தில் வந்த ஓமிக்ரான் மாறுபாடு இந்தியா உள்பட உலக நாடுகளை பதம் பார்த்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என உலகின் வல்லரசு நாடுகளிலும் ஓமிக்ரான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

ஓமிக்ரான் வைரஸ்
உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர்.. டெல்டாவை வைரஸை விட இது வீரியம்மிக்கது என்று
ஒருபக்கம் தகவல்கள் பரவின. ஆனால் ஓமிக்ரான் வைரஸ் மிகவும் லேசானதுதான், டெல்டா வைரஸை விடவும் ஓமிக்ரான் வைரஸ் குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது என்று தென்னாப்பிரிக்கா மருத்துவ நிபுணர்கள் உள்பட பலர் கூறினார்கள்.

5,00,000 இறப்புகள்
ஆனால் உலக சுகாதார அமைப்பு இதனை மறுத்து வந்தது, இந்த நிலையில் நவம்பர் பிற்பகுதியில் ஓமிக்ரான் வைரஸ் கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து உலகளவில் 130 மில்லியன் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தற்போது கூறியுள்ளது. ஓமிக்ரான் வைரசால் 5,00,000 இறப்புகள் பதிவாகியுள்ளது என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

தடுப்பூசி இருந்தும் இந்த நிலைமை
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரி அப்டி மஹமுட் கூறுகையில், ' இந்த திறமையான தடுப்பூசிகளின் யுகத்திலும் அரை மில்லியன் மக்கள் இறக்கின்றனர். ஓமிக்ரான் வைரசிடம் அதிகமான தாக்கம் இருக்கிறது. ஒமிக்ரான் லேசானது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தாலும், இந்த வைரஸ் வந்ததில் இருந்து அரை மில்லியன் மக்கள் இறந்துள்ளனர் என்பதை அவர்கள் கண்டுபிடிக்க தவறவிட்டனர்' என்று கூறினார்.

மிகவும் மோசமானது
கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமைக்ரான் தொற்று முந்தியுள்ளது. இது மிகவும் மோசமானது என்று கூறிய அப்டி மஹமுட், 'பல நாடுகள் இன்னும் ஓமிக்ரானின் உச்சத்தை கடக்கவில்லை. இந்த வைரஸ் தொடர்ந்து ஆபத்தானது. இதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். இன்னும் இந்த தொற்றுநோயின் நடுவில்தான் இருக்கிறோம்' என்று எச்சரிக்கையுடன் கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications