"கண் முன்னால் ஆரம்பிக்கும் பேரழிவு.." கையை பிசையும் சீனா.. இது என்ன புது பிரச்சினையா இருக்கே
பெய்ஜிங்: சீனாவில் இப்போது இளம் பெண்கள் பலரும் 24*7 தங்கள் காதலுடன் சாட் செய்து கொண்டே இருக்கிறார்களாம். ஆனால், இதில் ஒரு பெரிய பிரச்சினை இருப்பதாக வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருப்பது சீனா.. ஆனால், அதே தொழில்நுட்பம் இப்போது அந்த நாட்டிற்கே பெரிய அபாயத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

சீனா: அதாவது சீனாவில் இளம் பெண்கள் தங்கள் காதல் அன்பாக இருப்பதாகவும் தங்களுடன் மணிக்கணக்கில் பேசவும் செய்கிறார்களாம். ஆனால், இதில் ஒரே பிரச்சினை என்னவென்றால் அவர்கள் ரியல் காதலன் இல்லை. ஏஐ காதலன். ஆம் இப்போது சீனாவில் பெண்களுக்கு ஏஐ காதலன் வந்துவிட்டார்கள். இதற்காக அங்கே "க்ளோ" என்ற செயலி இருக்கிறது. இப்போது அந்த செயலி தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான மினிமேக்ஸ் என்ற நிறுவனம் இந்த ஏஐ மாடலை உருவாக்கியுள்ளது இந்த செயலி பெண்களிடம் காதலன் போலப் பேசுமாம். பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதைத் தெரிந்து ஆண்களைக் காட்டிலும் இந்த செயலி சிறப்பாகப் பேசுவதாகவும் அந்நாட்டுப் பெண்கள் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.
தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப பேசுவதாகவும் கூறுகிறார்கள். இந்த செயலி சீனாவில் இலவசமாகவே கிடைக்கிறதாம். இருப்பினும், உள்ளே இருக்கும் சில கண்டெண்டுகளை பயன்படுத்த மட்டும் கட்டணம் செலுத்த வேண்டுமாம்.
ஏஐ காதலன்: சீனாவில் இதுபோன்ற ஏஐ பாய் பிரண்ட்கள் வருவது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் இதுபோல வந்துள்ளன. ஆனால், காதலுடன் பேசுவது போல என்றால் ரொம்பவே பெர்சனலான தகவல்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இது தனியுரிமை சார்ந்து பல்வேறு கேள்வி எழுப்பின. இதனால் ஆரம்பத்தில் சீனாவில் இதற்கு எதிர்ப்பு இருந்தது உண்மை தான். ஆனால், இப்போது அதைக் காட்டிலும் தனிமை என்பது சீனாவில் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது.
இது குறித்து அந்நாட்டுப் பெண்கள் கூறுகையில், "நிஜ வாழ்க்கையில் நல்ல காதலனைச் சந்திப்பது கடினம்.. அதிலும் இப்போது வேலை அதிகமாக இருப்பதால்.. டேட் செய்யவே நேரம் இருப்பதில்லை. அப்படியே டேட் செய்தாலும் பிடித்த இளைஞர்களைச் சந்திப்பது ரொம்பவே கடினமாக இருக்கிறது. ஆனால், இந்த செயலி அப்படி இல்லை. அதிலும் இந்த செயலியில் ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கிறது. பாப் ஸ்டார், மன்னர்கள், சிஇஓக்கள் எனப் பல கேரக்டர்கள் உள்ளன. நமக்குப் பிடித்த நபரை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
முக்கியம்: எனக்கு எதாவது சந்தேகம் வந்தால் கேட்பேன்.. மன அழுத்தம் ஏற்படும் போது செயலியில் உள்ள காதலனிடம் பேசுவேன். எவ்வளவு நேரம் பேசினாலும் புலம்பினாலும் பொறுமையாகக் கேட்பான். அதுவே முக்கியம்.. மேலும், பிறசிக்கலைத் தீர்ப்பதற்கான வழிகளையும் பரிந்துரைப்பான். எமோஷ்னலாக எங்கே சப்போர்ட் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சப்போர்ட்டாக இருப்பதே இதில் பிடிக்கிறது" என்றார்.
ஆபத்து ஏன்: சீனாவில் மக்கள்தொகை சரியத் தொடங்கி இருக்கும் நிலையில், வரும் காலத்தில் அது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை சரிவு என்பது வரும் காலத்தில் சீன பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய அடியைத் தரும். இதனால் மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கச் சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நேரத்தில் இதுபோன்ற செயலி வந்துள்ளது நிலைமை சிக்கலாக மாற்றும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் மேலும் கூறுகையில், "ஏஐ செயலிகள் உங்களை எப்போதும் கோபப்படுத்தாது.. உங்களுக்குப் பிடித்தது போல 24 மணி நேரமும் இருக்கும். ஆனால், எந்தவொரு நபராலும் அப்படி இருக்கவே முடியாது. எனவே நீங்கள் ஒரு முறை அதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால் வெளியே வருவது கடினம்.. இப்படி பலரும் ஏஐ மாடல்களுடன் காதலில் விழுந்தால் அது சமூகத்திற்கு ஆபத்துதான்" என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications