மோடிக்கு பிரவுன்! ராஜ்நாத் சிங்கிற்கு வெள்ளை! குதிரை பரிசளிக்கும் மங்கோலியாவின் பின்னணி காரணம்
உலான்பட்டர்: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மங்கோலியா நாட்டு அதிபர் உக்னாகின் குருல்சுக் வெள்ளை நிறத்தில் குதிரை பரிசளித்துள்ளார். இதற்கு ராஜ்நாத் சிங் ‛தேஜஸ்' என பெயரிட்டுள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான், மங்கோலியா நாடுகளுக்கு சென்றார். ஒரு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மங்கோலியா செல்வது இதுதான் முதல் முறையாகும்.
இந்நிலையில் 5ம் தேதி மங்கோலியா சென்ற ராஜ்நாத் சிங் 7 ம் தேதி வரை அங்கு இருந்தார். ராஜ்நாத் சிங் அந்த நாட்டின் அதிபர் உக்நாகின் குருல்சுக்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தபேச்சுவார்த்தையின்போது இருநாட்டின் உறவுகள் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது.

வெள்ளை நிற குதிரை பரிசு
இந்த வேளையில் மங்கோலியா அதிபர் உக்னாகின் குருல்சுக், ராஜ்நாத்சிங்கிற்கு பரிசாக வெள்ளை நிறத்தில் குதிரை ஒன்றை வழங்கினார். இதையடுத்து குதிரையுடன் ராஜ்நாத் சிங் இருக்கும் படத்தை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛மங்கோலியாவின் சிறப்பு நண்பரிடம் இருந்து சிறந்த பரிசு கிடைத்துள்ளது. வசீகரமான இந்த அழகுக்கு தேஜஸ் என பெயர் சூட்டியுள்ளேன். அதிபர் குருல்சுக்கிற்கும், மங்கோலியாவுக்கும் நன்றி'' என்றார்.

மோடியை தொடர்ந்து ராஜ்நாத்சிங்
முன்னதாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் 2015ல் மங்கோலியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அப்போது மங்கோலிய பிரதமராக இருந்த சிமெட் சாய்கான்பிலெக், பிரவுன் நிறத்திலான பந்தய குதிரை ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கினார். இந்த குதிரைக்கு ‛காந்தகா' என பெயரிடப்பட்டது. அதன்பிறகு தற்போது ராஜ்நாத் சிங்கிற்கு குதிரை வழங்கப்பட்டுள்ளது.

3 மில்லியன் குதிரை
பொதுவாக மங்கோலியாவுக்கு செல்லும் பல தலைவர்களுக்கு குதிரை பரிசாக வழங்கப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது மங்கோலியாவில் அதிகளவில் குதிரை உள்ளது. அதன்படி மங்கோலியாவில் 3 மில்லியனுக்கும் (மில்லியன் என்பது 10 லட்சம்) அதிகமான குதிரைகள் உள்ளன. அதன்படி 30 லட்சம் குதிரைகள் உள்ளன.

மக்கள் தொகைக்கு நிகராக..
மங்கோலி நாட்டின் மக்கள் தொகை என்பது 2020 நிலவரப்படி 32 லட்சமாகும். ஆனால் நாட்டில் உள்ள குதிரையின் எண்ணிக்கை என்பது 30 லட்சமாகும். அதாவது நாட்டின் மக்கள் தொகைக்கு சமமான அளவில் குதிரை உள்ளது. மேலும் 21ம் நூற்றாண்டிலும் கூட மங்கோலியா குதிரையை அடிப்படையாக கொண்ட கலாச்சாரத்தை கொண்டுள்ளது. இதனால் பிற நாட்டு தலைவர்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தொடர்ந்து குதிரைகளை பரிசளித்து வருகின்றனர்.
-
குதிரையில் யார் பாருங்க.. பெட்ரோல் பங்க் கூட்டத்தால் ஷாக்கான வங்கி ஊழியர்! என்ன கோபால் இது? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications