உலகின் நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சர்.. சவுதியின் சவுத் அல்-பைசல் மரணம்!
ரியாத்: உலகின் மிக நீண்ட கால வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும், அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளுடன், இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவை நெருங்கச் செய்தவருமான சவுத் அல்-பைசல் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.
சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக 1975ம் ஆண்டு பதவியேற்றவர் சவுத் அல்-பைசல். அவரது அறிவுத்திறமை காரணமாக, தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக அப்பதவியை அவரே அலங்கரித்தார். கடந்த ஏப்ரல் 29ம் தேதி, உடல் நிலை காரணமாக, பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் சவுத் அல்-பைசல் மரணமடைந்தார். சவுதி அரேபியாவின் அரசு ஊடகமும் இதை உறுதி செய்துள்ளது. இருப்பினும் மரணத்துக்கான காரணம் கூறப்படவில்லை. 75 வயதான சவுத் அல்-பைசல் சமீபகாலமாக உடல்நிலை நலிந்து காணப்பட்டார். முதுகில் மேற்கொள்ளப்பட்ட பல அறுவை சிகிச்சைகளால், உபகரணங்கள் உதவியுடன் நடமாடி வந்தார்.
அவர் ஓய்வு பெறும்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் "சவுத் அல்-பைசல் உலகின் நீண்டகால வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமல்ல, அறிவில் சிறந்த அமைச்சரும் அவர்தான்" என்று கூறிய வார்த்தை இவரது பெருமையை பறைசாற்றும்.
செல்வச்செழிப்பு கொண்ட சவுதி அரேபியாவை, பிற நாடுகளுடன் இணக்கமாக இருக்க செய்தது, குறிப்பாக மேலைநாடுகளுடன் சவுதியை நல்லுறவு கொள்ள செய்ததில் இவரது பங்கு முக்கியமானது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications