ஆம்பூர் ஃபரிதா குழும தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு
ஆம்பூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தோல் தொழிலில் ஃபரிதா குழுமம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரிப்பு என 11 தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது ஃபரிதா குழுமம்.
தமிழகத்தில் சென்னை, திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டத்தின் பேரணாம்பட்டு, புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள ஃபரிதா குழுமத்தின் தொழிற்சாலைகளில் கடந்த சில நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் பாடவேளைகளில் மட்டும் திரைப்படங்கள்..சிறார் சினிமா பற்றி அழுத்தி சொன்ன பள்ளிக்கல்வித்துறை
கடந்த 4 நாட்களாக மொத்தம் 62 இடங்களில் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகால வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.