இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகள் பிப்ரவரி 7-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் காலந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்து கொத்தாக கைது செய்து சிறைப்படுத்துகிறது.
அதேநேரத்தில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அண்மையில் அம்பலமானது. ஆனாலும் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதனிடையே தமிழகம், ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக அமெரிக்கா, சீனா தூதர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இலங்கைக்கான சீனாவின் தூதரை யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் டக்ளஸ் தேவானந்தா அழைத்து சென்றார்.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடுவது என முடிவு செய்திருக்கிறது ராஜபக்சேக்கள் அரசு. இந்த ஏலம் பிப்ரவரி 7-ந் தேதி முதல் நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி யாழ். காரைநகரில் 65 படகுகளும் பிப்ரவரி 8-ந் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளும் பிப்ரவரி 9-ந் தேதி கிராஞ்சியில் 24 படகுகளும் பிப்ரவரி 10-ந் தேதி தலைமன்னாரில் 09 படகுகளும் பிப்ரவரி 11-ந் தேதி கற்பிட்டியில் 02 படகுகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகிரங்கமாக ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான்












Click it and Unblock the Notifications