இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகள் பிப்ரவரி 7-ந் தேதி முதல் 5 நாட்களுக்கு ஏலத்தில் விடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் காலந்தோறும் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கொத்து கொத்தாக கைது செய்து சிறைப்படுத்துகிறது.
அதேநேரத்தில் இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அண்மையில் அம்பலமானது. ஆனாலும் இருநாட்டு மீனவர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.
இதனிடையே தமிழகம், ஈழத் தமிழ் மீனவர் பிரச்சனையை சர்வதேச விவகாரமாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக அமெரிக்கா, சீனா தூதர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இலங்கைக்கான சீனாவின் தூதரை யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட பகுதிகளுக்கும் டக்ளஸ் தேவானந்தா அழைத்து சென்றார்.
இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடியது எனவும் சுட்டிக் காட்டப்பட்டது. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடுவது என முடிவு செய்திருக்கிறது ராஜபக்சேக்கள் அரசு. இந்த ஏலம் பிப்ரவரி 7-ந் தேதி முதல் நாட்களுக்கு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 7 ஆம் தேதி யாழ். காரைநகரில் 65 படகுகளும் பிப்ரவரி 8-ந் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளும் பிப்ரவரி 9-ந் தேதி கிராஞ்சியில் 24 படகுகளும் பிப்ரவரி 10-ந் தேதி தலைமன்னாரில் 09 படகுகளும் பிப்ரவரி 11-ந் தேதி கற்பிட்டியில் 02 படகுகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகிரங்கமாக ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த ரெக்கார்டு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா! பல ஆண்டு ரொக்கார்டுகளை சல்லி சல்லியாக உடைத்த SKY படை! -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் திருந்தல.. இந்திய டீம் தோற்கணும்னு சொல்லி அடிவாங்கும் பாகிஸ்தான் அமீர் -
“ஒரு டான்ஸ் ஆடியது குத்தமா.. அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்.. என்ன இப்படி ஆகிடுச்சு -
இந்தியாவுக்கு வெடி வைத்த டிரம்ப்! அமெரிக்காவால் நமக்கு தொட்டதெல்லாம் நஷ்டம் தான்! -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
Codingஐ முழுசா AI செய்துவிட்டால்.. ஐடி ஊழியர்களுக்கு வேலையே இருக்காதா? பிரபல வல்லுநர் தந்த பதில் -
ரஷ்ய எண்ணெய்யை வாங்க.. அனுமதி கொடுத்த அமெரிக்கா! பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்! -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்?












Click it and Unblock the Notifications