தமிழால் உருவம் "வடித்த" கலைஞன்.. ஆஹா.. இது நானா.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா!
காஞ்சிபுரம்: தனது உருவத்தை பண்டையத் தமிழ் எழுத்துகள் மூலம் வரைந்த தமிழக கலைஞரை தமிழில் பாராட்டியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.
66 வயதாகும் ஆனந்த் மகிந்திரா சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது கவனத்திற்கு புதுமையான விஷயம் வந்தால் உடனே அதை வெளியுலகிற்கு கொண்டு வந்து அதை பாராட்டிவிடுவார்.
அந்த வகையில் ஓவியர்கள், பழைய பொருட்கள் மூலம் வாகனத்தை அசம்பிள் செய்த நபர், மரக்கட்டைகளால் திரெட் மில் செய்தவர் என பெரும்பாலானவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இட்லி பாட்டி
மேலும் கோவையை சேர்ந்த இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு புதிதாக வீடு கட்டி அதை அன்னையர் தினத்தில் ஒப்படைத்துள்ளார். நிறைய நற்காரியங்களை செய்து வரும் ஆனந்த் மகிந்திராவுக்கு பாலோயர்ஸ்கள் அதிகம். அந்த வகையில் ஆனந்த் மகிந்திராவின் உருவத்தை தமிழ் எழுத்துகளால் வரைந்துள்ளார்.

741 பண்டைய தமிழ் எழுத்துகள்
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். 741 பண்டைய தமிழ் எழுத்துகள் மூலம் இந்த படத்தை வரைந்துள்ளார். இது போல் வரைவது இதுதான் முதல்முறை என கூறி வீடியோவை பதிவிட்டுள்ள கணேஷ், உங்களின் ஆலோசனையை கேட்க ஆவலாக உள்ளேன் என ஆங்கிலத்தில் பதிவு போட்டிருந்தார்.

ஆனந்த் மகிந்திரா ட்வீட்
இதற்கு ஆனந்த் மகிந்திரா தமிழில் பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஆஹா என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது. நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் பாராட்டு
ஆனந்த் மகிந்திரா நிறைய பேரது தனித்துவமான சாதனைகளை கண்டறிந்து பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். தற்போது பாராட்டுக்குள்ளான கணேஷ் தனது ஓவியங்களுக்காக முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications