திருமாவுடன் நடந்த சந்திப்பு.. திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாம்.. சொல்கிறார் வைகைச் செல்வன்!
காஞ்சிபுரம்: ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவனை 20 நிமிடங்கள் சந்தித்து வைகை செல்வன் பேசி இருந்தார். அதுவெறும் இலக்கிய சந்திப்பு என்று திருமாவளவன் கூறி இருந்த நிலையில், வைகை செல்வன் கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டதாக கூறி இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 நாட்களுக்கு முன்பாக விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியான வைகை செல்வன் சந்தித்து கொண்டனர். அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், இரு கட்சியின் நிர்வாகிகளும் தங்களது கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணையும் என்று கூறி வருகின்றனர்.

திருமா - வைகை செல்வன் சந்திப்பு
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருகிறோம். அவர்கள் ஏற்கனவே எங்களுடன் கூட்டணியில் இருந்த கட்சிதான். திருமாவளவன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்தார். அதேபோல் திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளில் போட்டியிட்ட விரும்புகிறோம் என்று கூறி வந்தார். இந்த நிலையில் திருமாவளவன் - வைகை செல்வன் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
திருமாவளவன் விளக்கம்
சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அரசியல் எதுவும் பேசவில்லை என்று திருமாவளவன் தெரிவித்தார். திருச்சியில் ஒரே விடுதியில் தங்கியதால், அவர் ஒரு புத்தகம் கொடுத்தார். அப்போது அவரின் இலக்கியப் பணிகள் குறித்து பேசியதாக விளக்கம் அளித்தார். திமுக கூட்டணி ஒற்றுமையுடன் செயல்பட திருமாவளவன் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்.
திமுக கூட்டணியில் ஓட்டை
இந்த நிலையில் அவர் அதிமுக நிர்வாகியை சந்தித்தது பல்வேறு விவாதங்களை தொடங்கியது. தற்போது காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருமாவளவன் உடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகை செல்வன், ஆளுங்கட்சியாக உள்ள திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துவிட்டது என்பதை தான் என்னால் சொல்ல முடியும்.
பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம்
இது முதல் கட்டம்தான். அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்களை பார்க்க போகிறீர்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தி விவகாரம் தொடர்பான கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் இருக்கிறார் என்ற காரணத்திற்காகவும், ஒரு எம்எல்ஏ என்ற நிலையை கூட கருத்தில் கொள்ளாமல் காழ்ப்புணர்ச்சியில் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
அதிமுக - பாமக கூட்டணி?
இதற்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு தந்துள்ளது என்று அரசு சொல்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கிறோம். அடுத்தக்கட்ட நிகழ்வுகளை பார்த்த பின்னரே, பேச முடியும் என்று தெரிவித்தார். அதிமுக உடன் பாமக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். ஆனால் பாமக உடைந்ததற்கு திமுக தான் காரணம் என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளதை பார்க்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications