அயோத்திக்கு விமானம் மூலம் காஞ்சியில் இருந்து புனித மண், செங்கற்கள்- சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர்
காஞ்சிபுரம்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்காக காஞ்சியில் இருந்து புனித மண் , செங்கற்கள் உள்ளிட்டவை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்க உள்ளார்.

ராமர் கோவில் பூமி பூஜை தொடர்பாக காஞ்சி சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி உள்ளதாவது:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு காஞ்சி காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில். வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள புனித மண், பூஜை செய்யப்பட்ட செங்கற்கள், ராம நாம மந்திரம் எழுதிய வெள்ளி தாம்பாளம், தங்க, வெள்ளி நாணயங்கள், பூஜை பொருட்கள் ஆகியவை சங்கர மடம் சார்பில் விமானம் மூலமாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கும், அயோத்திக்கும் ஆன்மீக ரீதியாக நிறைய தொடர்பு உள்ளது. பல்வேறு ஆன்மீக முயற்சிகளுடன் ராமர் கோவில் பிரச்சனைக்கு சட்டத்தின் மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் சரித்திர சான்றுகளுடனும் தொல்பொருள் சான்றுகளுடனும் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி கண்டு தற்போது அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ளது. அயோத்தி பிரச்சினை என்பது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் தொடங்கி தற்போது நரேந்திர மோடியின் ஆட்சி காலத்தில் நிறைவடைந்து பூமி பூஜை நடைபெற இருக்கிறது.
பூமி பூஜை நடைபெறும் அன்று பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அவரவர் இடத்தில் இருந்து தேச பக்தியுடன் தெய்வ பக்தியுடன் ராம மந்திரத்தை ஜபித்து பூமி பூஜையில் கலந்து கொள்ளவேண்டும். இவ்வாறு காஞ்சி சங்கரமட மடாதிபதி விஜயேந்திரர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications