Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை கழுவ சென்ற மாணவி..பின்னாலே சென்று கையை ஈரமாக்கி.. மதபோதகர் செய்த ச்சீ ச்சீ செயல்! அதிர்ந்த குமரி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தனியார் ஹோட்டலில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மதபோதகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் CSI நிர்வாகத்தின் கீழ் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமாக மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில துறையினை சார்ந்த இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியருக்கு துறை சர்ந்த சிறப்பு வகுப்பு நடைபெற்று உள்ளது.

மத போதகர் சில்மிஷம்

மத போதகர் சில்மிஷம்

வகுப்புகள் முடிந்த நிலையில் மாணவ, மாணவியர் கல்லூரியின் அருகே உள்ள உணவகத்திற்கு சென்று உள்ளனர். அங்கு குமரி மாவட்டம் மேக்காமண்டபத்தை சேர்ந்த ஸ்பெர்ஜன் சாமுவேல் என்ற மதபோதகர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகாமையில் உள்ள இருக்கையில் அமர்ந்த மாணவிகளிடம் சில்மிச செய்கையில் அவர் ஈடுப்பட்டதாகவும் மாணவிகளிடம் செல்போன் நம்பரை கேட்டதாகவும் தெரிகிறது.

மாணவி அதிர்ச்சி

மாணவி அதிர்ச்சி

மேலும் அதில் ஒரு மாணவி கை கழுவும் இடம் சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்று அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மாணவி முன்னிலையில் கைகளை ஈரமாக்கி ஆபாச செய்கைகள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி ஹோட்டலில் இருந்த சக மாணவர்களிடம் தெரிவித்த நிலையில் மாணவர்களுக்கும் மதபோதகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கார் கண்ணாடி உடைப்பு

கார் கண்ணாடி உடைப்பு

இந்நிலையில் மாணவர்களிடம் இருந்து தப்பித்து மதபோதகர் தனது காரில் செல்ல முயன்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து இருசக்கரவாகனத்தில் கல்லூரி மாணவர்கள் சென்றுள்ளனர். மதபோதகர் சாலையில் வேகமாக காரை இயக்கி செல்லும் வீடியோ மாணவர்களது செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சுங்கான்கடை பகுதியில் மதபோதகரின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அங்கு கூடியவர்கள் மதபோதகரின் வாகன கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

இத்தகவல் அறிந்து வந்த போலீசார் மத போதகரை பாதுகாத்தனர். அவரது காரை பின் தொடரந்து வந்த மாணவர்களை கண்டித்ததோடு மதபோதகரை பத்திரமாக வழியனுப்பியும் வைத்தனர். இந்நிலையில் மதபோதகர் மாணவி புகார் அளித்துள்ளார். புகார் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+