Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாக்குரிமை இல்லை என சொல்ல நீதிபதிகளுக்கு என்ன அதிகாரம்? - தளவாய் சுந்தரம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு வாக்குரிமை இல்லை என சொல்ல நீதிபதிகளுக்கு என்ன அதிகாரம்?-வீடியோ

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் கூறுகையில், தமிழகத்தில் நீதிபதிகள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

    கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் தளவாய் சுந்தரம். அப்போது அவர் ,தமிழகத்தில் நீதிபதிகள் வரம்பு மீறி செயல்படுகிறார்கள் என்று மக்கள் மத்தியில் கூறினார்.

    admk leader thalavai sundaram blames judges

    அவர் பேசுகையில், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்று கூற நீதிபதிகளுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? தமிழகத்தில் நீதி துறையின் தலையீடு அதிகமாக உள்ளது. இந்த நீதிபதிகள் யாரும் தேர்வு எழுதி நீதிபதிகள் ஆனவர்கள் கிடையாது .தங்களின் சீனியர்களின் கை கால்களைப் பிடித்து காலேஜியம் மூலம் பதவிக்கு வந்தவர்களே .

    நீதிபதிகளின் இந்த செயல்பாட்டிற்கு தமிழக மக்களே முடிவு கட்டுவார்கள். மத்திய அரசு மற்ற மாநிலங்களுக்கு பேரிடர் நிதியை நேற்று அறிவித்த பிறகும் தமிழகத்திற்கு வழங்க வில்லை என்ற கேள்விக்கு பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மத்திய அரசு தனியாக வழங்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+