சொல்லாமல் வீட்டை விற்ற கணவன்.. வெளியேற மறுத்த மனைவி.. திடீரென சிலிண்டரை திறந்துவிட்ட கொடூரம்
புதிதாக வாங்கிய வீட்டிற்குள் கணவன் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது,
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் பகுதியில் தனது வீட்டை விற்ற நபர், இந்த தகவலை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லாமல் தலைமறைவாகிவிட்டார். இது தெரியாமல் வீட்டை வாங்கிய நபர், அங்கிருந்தவர்கள் வெளியேற மறுத்ததால் மனைவியுடன் வீட்டிற்குள் புகுந்து தற்கொலை மிரட்டல் விடுத்தனர்
குமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் சோமு. இவருக்கு மனைவி மற்றும் 11 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். சோமு தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தெரியாமல், குடியிருந்த வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு விற்பனை செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மனைவிக்கு தெரியாமல் வீட்டை மணிகண்டனுக்கு எழுதிக் கொடுத்த சோமு அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிகண்டன், மனைவியுடன் வாங்கிய வீட்டில் குடியேற வந்திருக்கிறார். ஆனால் சோமுவின் மனைவி பெனிலா மற்றும் குழந்தைகளுக்கு வீட்டை விற்பனை செய்த விவரம் தங்களுக்கு தெரியாது என்றனர். அத்துடன் மணிகண்டன், மனைவி மற்றும் குழந்தைகளிடம் அழுது தகறாறில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து வீட்டை விலைக்கு வாங்கிய மணிகண்டன் மற்றும் அவரது மனைவியுடன் திடீரென வாங்கிய வீட்டிற்குள் புகுந்து கதவை பூட்டி விட்டு சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து விட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை மிரட்டல் விடுத்தனர், இதனால் அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியினர் குழித்துறை தீயணைப்பு வீரர்கள் மற்றும் களியக்காவிளை போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், கதவுகளை உடைத்து மணிகண்டன் மற்றும் அவரது மனைவியை வீட்டின் வெளியே அழைத்து வந்தனர். இன்று இருவரும் வீட்டிற்கு செல்லுங்கள். நாளை காவல் நிலையம் வாருங்கள் , பேசிக் கொள்ளலாம் என பேசி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications