சி.எம்.வீட்டில் பாம் இருக்கு.. சீக்கிரம் வெடிக்கும்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குமரி இளைஞர் கைது
கன்னியாகுமரி: முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார். அவரை பூதப்பாண்டி போலீஸார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலினின் வீடு உள்ளது. அவரது அரசு பங்களாவை தவிர்த்து தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று அதிகாலை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் ஒரு மர்ம நபர் போன் செய்தார்.

அவர் முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து முதல்வரின் தேனாம்பேட்டை வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தொலைபேசி மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தவரின் எண்ணை வைத்து போலீஸார் தேடினர்.
அவர் கன்னியாகுமரி மாவட்டம் இசக்கிமுத்து என தெரியவந்ததை அடுத்து அவரை பூதப்பாண்டி போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதற்காக முதல்வர் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வைத்துள்ளார் என விசாரணை நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications