பிரபல "விஐபி" மனைவி..அதைவிடுங்க.. தீர்ப்பின்போது நாகர்கோவில் காசி செய்த காரியம்.. கன்னியாகுமரியே "ஆ"
கன்னியாகுமரி: நாகர்கோவில் காசியின் போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை பார்க்கும் அனைவருமே, ஆச்சரியத்தில் உறைந்து போகிறார்கள்.
காசி என்கிற சுஜி.. 26 வயதிலேயே வாழ்க்கையின் உயரத்தை கண்டதுடன் சிறைக்கும் சென்றுவிட்ட பட்டதாரி இளைஞன்.. இவரது அப்பா நாகர்கோவிலில் சுகுனா சிக்கன் டீலர் ஆவார்.. வசதியான குடும்பம் என்பதால், மகனை அளவுக்கு அதிகமான செல்லம் தந்து வளர்த்திருக்கிறார்கள். பிஞ்சு வயதிலேயே சேட்டையை துவங்கிவிட்டார் காசி..
பெண்கள்: கல்லூரி மாணவிகள், தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், வசதியான குடும்ப பெண்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை, தன் வலையில் சாய்த்துள்ளார்..

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அவர்களிடம் நெருங்கிப் பழகி, அதையும் வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை கறந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார் காசி. 4 மாடிக்கு வீடு கட்டி இருக்கிறார் காசி.. நிறைய சொத்துக்களையும் வாங்கி போட்டுள்ளார்.. 120 பெண்கள், 400 வீடியோக்கள், 1,900 ஆபாசப் படங்கள் அவரது லேப்டாப்பில் கைப்பற்றப்பட்டன..
நடிகர் மகள்: எஸ்ஐ மகள் ஒருவரையும் தன் வலையில் வீழ்த்தியதாக சொன்னார்கள்.. ஒரு பிரபல நடிகரின் மகளும், காசியின் பிடியில் விழுந்துவிட்டதாக சொன்னார்கள்.. ஒரு அரசியல்வாதி மனைவியும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளதாக சொன்னார்கள்.. எனவே, இதுதொடர்பான உண்மைகள் விரைவில் வெளிவரக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட விஐபிக்கள், அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் இருந்ததாக, தகவல்கள் பரபரத்தன. ஆனால், அவர்கள் எல்லாம் யார் என்று கடைசிவரை தெரியவில்லை..
அரசியல் தொடர்பு: அரசியல் பெரும்புள்ளிகளின் தொடர்பு காசிக்கு இருந்திருக்கிறது.. அதனால்தான், கட்சியில் ஒரு முக்கியமான பதவிக்குகூட காசி ஆசைப்பட்டானாம்.. ஆனால் சூழலும், நிலைமையும் சரியில்லாததால் அந்த வாய்ப்பு தள்ளி போய்விட்டதாம்.. இவரால் பாதிக்கப்பட்ட 5 பெண்கள் காசி மீது புகார் கொடுக்கவும் வழக்கு பதிவானது.. மாதர் சங்கமும் இந்த விஷயத்தில் தலையிட்டு, சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.. போக்சோவும் பாய்ந்தது. குண்டர் சட்டமும் பாய்ந்தது.
அனைத்து குற்றமும் நிரூபிக்கப்பட்டு, இப்போது நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும் தரப்பட்டுள்ளது. காசிக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பு வழங்கினார். அவரது மரணம் வரை சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்..
ஹார்ட்டின் காசி: வழக்கமாக, காசியை பற்றி மீடியாக்களில் நினைவுகூரும்போதெல்லாம் அவரது ஒரு போட்டோவும் சேர்ந்தே பலருக்கு நினைவுக்கு வரும்.. அந்த போட்டோ நாகர்கோவில் கோர்ட்டில் அவரை ஆஜர் செய்ய அழைத்து வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஆகும்..
பொதுவாக இப்படி, கைதானவர்களை கோர்ட்டுக்கு வந்தால், தங்கள் முகத்தை கைகளாலோ அல்லது துணியாலோ வெட்கப்பட்டு கொண்டு மறைத்து கொள்வார்கள்.. ஆனால் காசி அப்படி இல்லை.. அங்கிருந்த எல்லா செய்தியாளர்களையும் பார்த்து தன்னுடைய 2 கைகளால் "ஹார்ட்" சிம்பல் காண்பித்தார்... இத்தனைக்கும் அவரது கையில் விலங்கு பூட்டப்பட்டிருந்தது.. பக்கத்திலேயே போலீசாரும் நின்று கொண்டிருந்தனர்.. இவர்களையும் மீறி, ஹார்ட்டின் சின்னத்தை, கேமராவை பார்த்து காட்டிக்கொண்டே கோர்ட்டுக்கு போன காசியை பார்த்து இந்த தமிழகமே அதிர்ந்தது.

ஒயிட் & ஒயிட்: ஆனால், இந்த போட்டோவையே ஓவர்டேக் செய்துவிட்டது, காசியின் இன்னொரு போட்டோ.. நேற்றுமுன்தினம், தீர்ப்பை ஒட்டி கோர்ட்டில் ஆஜராகியிருந்தார் காசி.. தீர்ப்பு என்பதால், பதற்றத்துடனும், டென்ஷனும் கோர்ட்டுக்கு வருவார் என்று நினைத்தால், வெள்ளை சட்டை - வெள்ளை வேட்டி அணிந்துகொண்டு, கல்யாணத்துக்கு போவதை போலவே வந்திருந்தாராம்.. நீதிபதி தீர்ப்பு வாசிக்கப்பட்டவுடன், அவரது முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லையாம்.
தீர்ப்புக்கு பிறகு போலீஸ் காவலுடன், ஜெயிலுக்கு புறப்பட்ட காசி, கோர்ட் வாசலில் இருந்து இறங்கியபோது, அரசியல்வாதிபோல அங்கிருந்த எல்லாரையும் பார்த்து 2 கைகளை கூப்பி கும்பிட்டுக் கொண்டே போனாராம்..
அரசியல்வாதி: நீதிமன்ற வரலாற்றிலேயே.. சாகும்வரை ஜெயில் என்ற தீர்ப்பு தந்தபிறகும், எந்த சோகத்தையும், டென்ஷனையும், வருத்தத்தையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல், வெள்ளை சட்டை - வெள்ளை வேட்டியுடன் அரசியல்வாதிகளை போலவே, கெத்தாக, வணக்கம் வைத்துக்கொண்டே ஜெயிலுக்கு போன காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications