7 வயது சிறுமி பலாத்காரம் - 60 வயது முதியவருக்கு 10 ஆண்டு சிறை
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவருக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கரூர்: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தண்டனை பெற்ற முதியவரின் பெயர் சுந்தரம், 60. இவர் குளித்தலை அருகே தண்ணீர் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். கைத்தறி நெசவு தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஜூன் 2ஆம்தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7வயது சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்தார் என்பது இவர் மீதான புகார்.

சிறுமி அழுதுகொண்டே சென்று பெற்றோரிடம் கூறவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். சுந்தரத்தைக் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இந்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளி சுந்தரத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத் தவறினால் 3 மாத சிறை தண்டனை கூடுதலாக அனுபவிக்க வேண்டும் என்றும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 25 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் கூறி தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுந்தரத்தை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications