ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவது உரிமை! அது புதிய கல்விக் கொள்கையல்ல..குலக்கல்வி -கி.வீரமணி பேச்சு
கரூர்: ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டிய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Recommended Video
திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. திராவிட கழகத் தலைவர் வீரமணி தலைமையில் இதுவரை 31 மாவட்ட தலைநகரங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. நேற்று கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீட்தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து திராவிட கழகத் தலைவர் வீரமணி உரையாற்றினார்.

இதனை தொடர்ந்து இன்று கரூரில் உள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீட் தேர்வை எதிர்த்து நான் தொடங்கியுள்ள் பிரச்சாரப் பயணம் மக்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது. வருகிற 25 ந் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது சுற்று பயணத்தை முடித்து வைக்கிறார்.
இப்போது மத்திய அரசு கொண்டு வருவது புதிய கல்விக் கொள்கை அல்ல. அது பழைய கல்வி கொள்கையான குலக்கல்வி தான் அப்படி கொண்டு வருகின்றனர். இந்திக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ராஜாஜி காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள். இட ஒதுக்கீடு, சமூக நீதி, பெண் கல்வி இவைகள் எதுவும் அதில் இல்லை. மூன்றாவதாக இந்தி மொழியை மறைமுகமாக கொண்டு வர முயற்சிக்கிறார்கள். இணைப்பு மொழி இந்திதான் என்று வெளிப்படையாக அமித்ஷா பேசுகிறார்.
பொது மக்கள் ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய உரிமை உள்ளது. எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கறுப்புக்கொடி காட்டுவது பொது மக்களின் ஜனநாயக உரிமை. ஆனால், ஆளுநர் பயணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்." என்று தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications