இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு.. வீட்டுக்குள்ளேயே புத்தகம் படிக்கும் கரூர் எம்பி ஜோதிமணி
கரூர்: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இன்று கரூர் எம்பி ஜோதிமணி புத்தகம் படித்து கொண்டிருக்கும் காட்சிகளை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் 3ஆவது நிலைக்கு செல்வதை தடுக்க இன்று ஒரு நாள் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி இன்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பல்வேறு பிரபலங்களும் வலியுறுத்தினர். மேலும் புத்தகம் படித்தல், சினிமா பார்த்தல், செய்தித்தாள்களை வாசித்தல், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் உள்ளிட்ட பணிகள் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா: தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
அதன்படி கரூர் எம்பி ஜோதிமணி ஊரடங்கையொட்டி வீட்டுக்குள் உட்கார்ந்து புத்தகம் படித்து தனது நேரத்தை செலவிடுகிறார். அன்றாடம் தொகுதி பிரச்சினை, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என இருந்த அவர் இன்று புத்தகம் படித்து வருகிறார்.
இது புத்தகம் படிப்பதற்கான நேரம்!அதற்குமுன் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர்,திண்டுக்கல்,திருச்சி,
— Jothimani (@jothims) March 22, 2020
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள்&கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரைத் தொடர்புகொண்டு கொரொனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன். pic.twitter.com/yIoUXp66tu
இதுகுறித்து ஜோதிமணி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது புத்தகம் படிப்பதற்கான நேரம்!அதற்குமுன் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர்,திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள்&கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரைத் தொடர்புகொண்டு கொரொனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன் என தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications