தேர்தல் பணிகளில் புகார்... கரூர் கலெக்டர், எஸ்பி இடமாற்றம்... தேர்தல் ஆணையம் அதிரடி
கரூர்: தேர்தல் பணிகள் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியில் மலர்விழி மற்றும் எஸ்பி மகேஸ்வரனை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் அடுத்த வாரம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
மறுபுறம் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆளும்கட்சிக்குச் சாதகமாக ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருவதாக திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புகார் அளித்திருந்தார். இந்நிலையில், தற்போது கரூர் ஆட்சியர் மலர்விழியை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல, மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரனையும் தேர்தல் அல்லாத பணிக்குத் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.
மலர்விழிக்கு பதிலாகக் கரூர் ஆட்சியராக பிரசாந்த் வடநரே நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கரூர் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ஷஷாங்க் சாய் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கோவையில் புதிய காவல்துறை துணை ஆணையர் ஜெயச்சந்திரனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications