கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முட்டி போட்டு வந்து ‘முதல்வர்’ ஆனாங்க! கோயம்புத்தூர் ‘கிரிப்டோ’மணி! விளாசித் தள்ளிய செந்தில் பாலாஜி!

Google Oneindia Tamil News

கரூர் : முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர் எனவும், இன்னும் நூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

Recommended Video

    முட்டி போட்டு வந்து ‘முதல்வர்’ ஆனாங்க! விளாசித் தள்ளிய செந்தில் பாலாஜி!

    கரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட திமுக அவை தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்திர்வை துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள்...முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாள்...முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜி

    அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி," முதல்வராக பதவி ஏற்று முதன் முதலாக கரூர் மாவட்டத்திற்கு வரும் 1ம் தேதி வருகை தரும் முதல்வருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்றும், தாந்தோன்றிமலை அரசு பயணியர் விடுதியில் தங்கும் முதல்வர் 2ம் தேதி திருமாநிலையூர் பகுதியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதல்வர் வரும் வழி எங்கும் 1 லட்சம் பேர் திரண்டு இருந்து வரவேற்பு அளிக்க வேண்டும்

    முதல்வர் வருகை

    முதல்வர் வருகை

    நம் பகுதிகளில் நலத்திட்டங்கள் பெற தகுதி இருந்தும், பெறாமல் இருப்பவர்களை உள்ளாட்சி பிரதிநிதிகள் கண்டறிந்து சொன்னால் அவர்களுக்கு முதல்வர் கையால் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்றார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 இடங்களிலும் தலைவர் அறிவிக்கின்ற வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியா முழுவதும் கிடைக்க பிரதமரை தேர்ந்தெடுக்கும் சக்தியாக நம் முதல்வர் இருக்க வேண்டும்

    எஸ்.பி.வேலுமணி

    எஸ்.பி.வேலுமணி

    எதிர்முகாமை சார்ந்த ஒரு மணி, திமுக ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள் என்று பேசியுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த கிரிப்டோ மணியாக இருந்தாலும் சரி, எந்த மணியாக இருந்தாலும் சரி. கறந்தபால் ஒருபோதும் மடி புகாது, ஊர்க்குருவி பருந்தாகாது, முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர்.

    திமுக ஆளும்

    திமுக ஆளும்

    இன்னும் நூறு ஆண்டு காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான். நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்த பேராதரவே அதற்கு சாட்சி என்றார். கரூர் மாவட்டத்திற்கு 1 ஆண்டில் 3000 கோடி ரூபாய் திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். கரூர் மாவட்டம் தளபதியின் எஃகு கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.

    English summary
    Tamil Nadu Electricity Minister Senthil Balaji has slammed edappadi palanisamy dreaming of becoming the next Chief Minister if the people vote for him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X