சர்ச்சையை கிளப்பிய சுயேச்சைகள்...சைதை துரைசாமி, அண்ணாமலை வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்பு
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது. அதேபோல சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ப
கரூர்: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவும் சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது.
தமிழகம், புதுச்ரேி, கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை விறுவிறுப்பாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நிறைவடைந்தது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணாமலை தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என்றும் எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான விளக்கம் அளித்த பிறகு மனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே போல சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருமானவரி பற்றிய தகவலை தெரிவிக்காமல் இருப்பதால் சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.
வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் திக் திக் மனநிலையில் இருந்த வேட்பாளர்கள் பலரும், பரிசீலனைக்குப் பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் பலரும் நிம்மதி பெறுமூச்சு விட்டனர்.
இதே போல மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியாவின் வேட்புமனுவும் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
திரிசங்கு சொர்க்கத்தில் சி.விஜயபாஸ்கர்! கடைசி நேரத்தில் காலைவாரிய திமுக! போக்கு காட்டும் பனையூர்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications