சர்ச்சையை கிளப்பிய சுயேச்சைகள்...சைதை துரைசாமி, அண்ணாமலை வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பின் ஏற்பு
அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது. அதேபோல சைதாப்பேட்டை அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ப
கரூர்: தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. சைதாப்பேட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும், அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவும் சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் ஏற்கப்பட்டது.
தமிழகம், புதுச்ரேி, கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. நேற்று வரை விறுவிறுப்பாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் செய்யும் அவகாசம் நிறைவடைந்தது.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின், அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக புகார் எழுந்ததால் அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் பலர் அண்ணாமலை மனுவை ஏற்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அண்ணாமலை தன் மீதுள்ள வழக்குகளை மறைத்துள்ளார் என்றும் எனவே மனுவை ஏற்கக்கூடாது என திமுக, சுயேச்சை வேட்பாளர்கள் வலியுறுத்தியதை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரியான விளக்கம் அளித்த பிறகு மனு ஏற்கப்பட்டதாக தகவல் வெளியானது.
அதே போல சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருமானவரி பற்றிய தகவலை தெரிவிக்காமல் இருப்பதால் சுயேச்சைகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து மனு நிறுத்தி வைக்கப்பட்டது. சரியான விளக்கம் அளிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பிறகு வேட்புமனு ஏற்கப்பட்டது.
வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்ட நேரத்தில் திக் திக் மனநிலையில் இருந்த வேட்பாளர்கள் பலரும், பரிசீலனைக்குப் பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் பலரும் நிம்மதி பெறுமூச்சு விட்டனர்.
இதே போல மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியாவின் வேட்புமனுவும் பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
-
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்?












Click it and Unblock the Notifications