'தி.மு.க ஆட்சியில் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் உள்ளனர்'.. ஜோதிமணி எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டு!
கரூர்: மத்திய அரசின் சமூக நீதி துறையின் மூலம் மாற்று திறனாளிகள் நலத்திட்ட செயல்பாடுகள்ADPI) என்ற திட்டம் மூலம் நாடு முழுக்க மாற்றுத்திறனாளிக்கு பல்வேறு உதவிகள், மூன்று சக்கர வாகனங்கள், ஸ்பெஷல் நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
Recommended Video
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ADIP திட்டம் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கரூரில் இத்திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

ஜோதிமணி எம்பி கடும் விரக்தி
இது தொடர்பான முகாம்களை நடத்த கோரி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கரிடம், ஜோதிமணி எம்.பி பலமுறை வலியுறுத்தியதாகவும், ஆனால் மாற்றுத்திறனாளி முகாம்களை கலெக்டர் நடத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கரூர் மாவட்ட கலெக்டர் மீது ஜோதிமணி எம்பி கடும் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்
இந்த நிலையில் இந்த பணிகளை செய்ய விடாமல் கரூர் மாவட்ட ஆட்சியர் தனக்கு இடையூறு விளைவிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ள ஜோதிமணி எம்.பி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டருக்கு எதிராக தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் கலெக்டர் வந்து தர்ணாவில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி.யிடம் சமாதானம் பேசி தர்ணாவை முடித்து கொள்ளும்படி கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியவில்லை
ஆனால் ஜோதிமணி எம்.பி மறுத்து விட்டார். இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் ADP தொடர்பான முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இந்த முகாம்கள் நடத்தாத காரணத்தால் திருச்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க முடியாத நிலை உள்ளது.

தி.மு.க ஆட்சியிலும் ஊழல் அதிகாரிகள்
இது தொடர்பாக நான் பலமுறை கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கூறி இருக்கிறேன். ஆனால் அவர்கள் இந்த முகாமை நடத்த மறுத்து வந்துள்ளனர். அ.தி.மு.க ஆட்சியிலும், தி.மு.க ஆட்சியிலும் ஊழல் கறைபடிந்த அதிகாரிகள் இன்னும் உள்ளார்கள் என்று ஜோதிமணி எம்.பி பரபரப்பு குற்றம்சாட்டினார். ஜோதிமணியின் குற்றச்சாட்டை கரூர் கலெக்டர் பிரபுசங்கர் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்!












Click it and Unblock the Notifications