ஸ்டாலின், செந்தில் பாலாஜி பற்றி அவதூறு.. அதிமுக ஐடி விங் நிர்வாகியை தூக்கி உள்ளே வைத்த போலீசார்!
கரூர்: முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து யூடியூப் சேனலில் அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகி பசுபதி செந்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு கட்சியினரும் மாற்றுக் கட்சியினரை கடுமையாக விமர்சித்துப் பேசி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் கட்சி நிர்வாகிகள் இடையே கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன.

சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சியை எதிர்க்கட்சியினரும், எதிர்க்கட்சியினரை திமுக கூட்டணியினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சில நேரங்களில் வரம்பு மீறி அவதூறு செய்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில், அவதூறு பரப்பியதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி செந்தில் (50). இவர் அதிமுக ஈரோடு மண்டல சமூக வலைதள பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து யூடியூப்பில் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திமுகவினர் அளித்த புகாரைத் தொடர்ந்து வேலாயுதம் பாளையம் போலீசார் பிப்.11 ஆம் தேதி பசுபதி செந்தில் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பசுபதி செந்திலை பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டதை அடுத்து அவரை கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், பசுபதி செந்தில் பேசியதை ஓளிப்பரப்பு செய்த யூடியூப் ஐபி முகவரிக்கு சொந்தமானவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications