ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொடூர விபத்து.. அடுத்தடுத்து மோதிய 10 வாகனங்கள்.. 3 பேர் பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தின் காரணமாக ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் இருபுறமும் சென்று வருகின்றன. கர்நாடக மாநிலம் செல்வதற்கு இந்த சாலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஓசூர் டூ கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை குருபரப்பள்ளி அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது.

குருபரப்பள்ளி அருகே சாலை அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலை அமைக்கும் பணியின் காரணமாக இந்த பகுதியில் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இன்று வாகனங்கள் அனைத்தும் மெதுவாகவே சென்றுகொண்டிருந்தன.
அப்போது இந்த சாலையில் வந்த கேரளாவை சேர்ந்த மினி கண்டெய்னர் லாரி மிக மெதுவாக நகர்ந்துள்ளது. சாலை அமைக்கும் பணி காரணமாக மெதுவாக வந்துள்ளது. இந்த லாரிக்கு பின்னால் இரண்டு கார்கள் வேகமாக வந்துள்ளன. இந்த கார்களுக்கு பின்னால் ஒரு சரக்கு லாரி வந்துள்ளது. அந்த லாரி இரண்டு கார்கள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் கார்கள் இரண்டும் முன்னால் சென்ற மினி கண்டெய்னர் லாரி மீது மோதி சிக்கிக்கொண்டது.
இதில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இரண்டு லாரிகளுக்கும் இடையே கார் சிக்கிக் கொண்டு நசுங்கியுள்ளது. இதேபோன்று கண்டெய்னர் லாரியும் சாலைக்கு மறுபுறம் பாய்ந்தது. இதற்கிடையே லாரி மீது மேலும் சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு ஆட்டோ, இரண்டு கார்கள், இரண்டு லாரி உள்பட மொத்தம் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து போலீசார், மீட்பு படையினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இந்த விபத்தின் காரணமாக கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications