Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொடூர விபத்து.. அடுத்தடுத்து மோதிய 10 வாகனங்கள்.. 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை அடுத்தடுத்து 10 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தின் காரணமாக ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் சுமார் 50 ஆயிரம் வாகனங்கள் இருபுறமும் சென்று வருகின்றன. கர்நாடக மாநிலம் செல்வதற்கு இந்த சாலை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஓசூர் டூ கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை குருபரப்பள்ளி அருகே தான் இந்த விபத்து நடந்துள்ளது.

10-vehicles-collide-head-on-on-hosur-krishnagiri-national-highway-3-killed

குருபரப்பள்ளி அருகே சாலை அமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். சாலை அமைக்கும் பணியின் காரணமாக இந்த பகுதியில் ஒருபுறம் மட்டும் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டு அதற்கான அறிவிப்பும் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் இன்று வாகனங்கள் அனைத்தும் மெதுவாகவே சென்றுகொண்டிருந்தன.

அப்போது இந்த சாலையில் வந்த கேரளாவை சேர்ந்த மினி கண்டெய்னர் லாரி மிக மெதுவாக நகர்ந்துள்ளது. சாலை அமைக்கும் பணி காரணமாக மெதுவாக வந்துள்ளது. இந்த லாரிக்கு பின்னால் இரண்டு கார்கள் வேகமாக வந்துள்ளன. இந்த கார்களுக்கு பின்னால் ஒரு சரக்கு லாரி வந்துள்ளது. அந்த லாரி இரண்டு கார்கள் மீது வேகமாக மோதியுள்ளது. இதில் கார்கள் இரண்டும் முன்னால் சென்ற மினி கண்டெய்னர் லாரி மீது மோதி சிக்கிக்கொண்டது.

இதில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் பலத்த சேதமடைந்தது. இரண்டு லாரிகளுக்கும் இடையே கார் சிக்கிக் கொண்டு நசுங்கியுள்ளது. இதேபோன்று கண்டெய்னர் லாரியும் சாலைக்கு மறுபுறம் பாய்ந்தது. இதற்கிடையே லாரி மீது மேலும் சில வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இரண்டு ஆட்டோ, இரண்டு கார்கள், இரண்டு லாரி உள்பட மொத்தம் 10 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து போலீசார், மீட்பு படையினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இந்த விபத்தின் காரணமாக கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+