கிருஷ்ணகிரியில் மருமகள் சத்தியவாணியுடன் மாமனார் உல்லாசம்.. கிணற்றில் இருந்த பெரிய ட்விஸ்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் டிராக்டர் ஓட்டும் டிரைவர் ஆவார். இவரது மனைவி சத்யவாணி.. இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. தமிழரசனின் தந்தை ராஜன், தாயார் லட்சுமி.. இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார்கள். இதில் சத்யவாணிக்கும் அவரது மாமானார் ராஜனுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாம். இதனிடையே மருமகளுடனான உல்லாசத்துக்கு இடையூறாக 5 மாத பேத்தி இருந்தாராம். இதனால் மாமனார் ராஜன் செய்த காரியம் பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
அப்பா மகள் போன்ற புனிதமான உறவு தான் மாமானார் மருமகள் உறவு.. ஆனால் அப்படியான உறவு சில நேரங்களில் கள்ளக்காதலில் மாறுகிறது, சிந்து சமவெளி படத்தில் வருவது போல் மாமனார் மருமகளின் இன்பவெறியாக மாறுகிறது. இது சமுதாயத்தில் எந்த காலத்திலும் ஏற்கப்படாது.. கடைசியில் உளவியல் ரீதியாக குடும்பத்தினர் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தனிப்பட்ட முறையில் கௌவரம், மானம், மரியாதை என எல்லாமே போய்விடுகிறது. சில நேரங்களில் அசிங்கத்திற்காக உறவுகளும் பறிபோகின்றன. அப்படியான ஒரு அசிங்கமான உறவு கிருஷ்ணகிரியில் இருந்துள்ளதாம். இதனால் பச்சிளம் குழந்தை உயிருடன் இல்லை...

மாமனாருடன் கள்ளக்காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமச்சந்திரத்தை சேர்ந்த 30 வயதாகும்தமிழரசன் டிராக்டர் ஓட்டும் டிரைவர் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சத்யவாணிக்கு 23 வயது ஆகிறது. இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தமிழரசன் தனது தந்தை ராஜன் (55), தாய் லட்சுமி (53) ஆகியோருடன் சேர்ந்து கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார்கள். மரம் அறுக்கும் தொழிலாளியான ராஜனுக்கும், அவருடைய மருமகன் சத்யவாணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறதாம். கணவர் இல்லாத நேரத்தில் சத்யவாணி மாமனாருடன் உல்லாசமாக இருந்து வந்தார்களாம்.
5 மாத குழந்தை மாயம்
ஆனாலும் அவர்கள் தொடர்பை தொடர்ந்து வந்துள்ளார்களாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சத்யவாணிக்கு 2-வது பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் தமிழரசன் வழக்கம் போல வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது 5 மாத பெண் குழந்தையை வீட்டில் காணவில்லை. இதை பார்த்த அவர் மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதையடுத்து குழந்தையை அவர்கள் தேடி பார்த்துள்ளார்கள்.
விசாரணையில் தெரியவந்த உண்மை
அப்போது வீட்டின் அருகில் சேட்டு என்பவரின் கிணற்றில் குழந்தையின் உடல் கிடந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து வந்த வேப்பனப்பள்ளி போலீசார் குழந்தையின் தாய் சத்யவாணியிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே போலீசாருக்கு சந்தேகம் வழுத்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
உல்லாசம்
கடந்த மார்ச் 18ம் தேதி சத்யவாணியை மாமனார் ராஜன் வழக்கம் போல உல்லாசமாக இருக்க அழைத்தார். அந்த நேரம் 5 மாத பெண் குழந்தை அழுது கொண்டே இருந்தள்ளது. இதையடுத்து தாய் சத்யவாணி குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு கழிவறைக்கு சென்றார். அந்த நேரத்தில் ஆத்திரத்தில் இருந்த ராஜன் குழந்தையின் மூச்சை அழுத்தி கொலை செய்துவிட்டாராம்.
தாய் உடந்தை
பின்னர் குழந்தையின் உடலை அருகில் உள்ள சேட்டுவின் கிணற்றில் போட்டு வந்தார். இதுபற்றி தெரிந்தும் சத்யவாணி யாரிடமும் கூறாமல் கொலைக்கு உடந்தையாக இருந்தாராம். இந்த தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சத்யவாணி, அவரது மாமனார் ராஜன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications