Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு.. உடனடி தீர்வு.. கிருஷ்ணகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில உள்ள 8 தாலுகாக்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது என்று கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி தாலுகாவில் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் வருகிற 16-ந் தேதி மற்றும் 20 முதல் 23-ந் தேதி வரையிலும், 27-ந் தேதி முதல் 30-ந் தேதிவரையும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

ஒவ்வொரு மாதமும், மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் விதமாக ஜமாபந்தி நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் குறைதீர்முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் அரசின் சேவைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். குறிப்பாக பட்டா, பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, அரசின் உதவித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக மனு அளித்து, பயன்பெற முடியும்.

jamabandi program begins in 8 talukas of Krishnagiri district on the 16th

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பர்கூர், போச்சம்பள்ளி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய 8 தாலுகாக்களில் வருகிற 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் வழங்கலாம். அதன்படி கிருஷ்ணகிரி தாலுகாவில் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் வருகிற 16-ந் தேதி மற்றும் 20 முதல் 23-ந் தேதி வரையிலும், 27-ந் தேதி முதல் 30-ந் தேதிவரையும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல் சூளகிரி தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், தேன்கனிக்கோட்டை தாலுகாவில் ஓசூர் உதவி கலெக்டர் பிரியங்கா தலைமையில் 16, 20, 21, 22, 23, 27, 28-ந் தேதிகளில் நடக்கிறது.

போச்சம்பள்ளி தாலுகாவில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் ஷாஜகான் தலைமையில் 16, 20, 21, 22, 23, 27-ந் தேதிகளிலும் பர்கூர் தாலுகாவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் ஓசூர் தாலுகாவில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தர்மராஜ் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும் நடக்கிறது.

ஊத்தங்கரை தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரமேஷ்குமார் தலைமையில் 16, 20, 21, 22, 23-ந் தேதிகளிலும், அஞ்செட்டி தாலுகாவில் மாவட்ட வழங்கல் அலுவலர் கீதாராணி தலைமையில் 16, 20-ந் தேதிகளிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+