கிருஷ்ணகிரியில் விரும்பிய மாமன் மகளுக்காக.. எந்த இளைஞனும் செய்யக்கூடாத முட்டாள்தனமான காரியம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே இளைஞர் ஒருவர், தான் விரும்பிய மாமன் மகளுக்கு இன்று வேறு இடத்தில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்ததால் மொத்த ஊரையும் ஆடிப் போக வைத்துள்ளார். தீயணைப்பு நிலையத்திலிருந்து அதிகாரிகளும் காவல்துறையினரும் வந்து இரண்டு மணி நேரம் சமாதானம் செய்த பிறகு அவர் நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு காதலுக்காக இளைஞர்கள் செய்யும் சில செயல்கள் அவர்களை மட்டும் இல்லாமல் அவர்களை உறவினர்களையும் பாதிக்கிறது. சில நேரத்தில் அரசாங்கத்தையும் சேர்த்தே அவர்களது தவறான செயல்கள் பாதிக்கிறது. தான் விரும்பிய மாமன் மகள் தனக்கு கிடைக்காமல் போகும் நிலை வந்தவுடன், ஒரு இளைஞர் செய்த செயல் போச்சம்பள்ளியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (28). இவருக்கும் இதே கிராமத்தை சேர்ந்த இவரது மாமன் மகள் மீது காதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மாமன் மகளுக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில், கோபமடைந்த ஜெகநாதன் வேங்கனூர் கிராமத்தில் உள்ள 400 கிலோ வாட் உயர் மின் அழுத்தம் கொண்ட சுமார் 125 அடி உயரம் கொண்ட உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
காலை 7 மணி முதல் உயர் மின் கோபுரத்தின் மீது இருந்தவரை கிராம மக்கள் கவனித்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த உறவினர்கள் நீண்ட நேரம் சமாதானம் செய்தும் அவர் சமாதானம் அடையாமல் இருந்து வந்தார். பிறகு மத்தூர் காவல் நிலையத்திற்கும், போச்சம்பள்ளி தீயணைப்பு துறைக்கும் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்கு வந்த காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இளைஞரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதில், சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கீழே இறங்கி வந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். மாமன் மகளுக்காக இளைஞர் செய்த முட்டாள்தனமான பாச போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications