வெடிகுண்டு மிரட்டல் புரளிதான்....லண்டனில் இருந்து புறப்பட்டது ஏர் இந்தியா விமானம்!
லண்டன்: வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நெவார்க் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம் லண்டனில் அவசரமாக தரை இறக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
மும்பையில் இருந்து அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நெவார்க்-க்கு ஏர் இந்தியா விமானம் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. லண்டன் வான்பரப்பில் சென்ற போது விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் 2 ஜெட் விமானங்கள் பாதுகாப்புடன் லண்டன் விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.30மணிக்கு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து சோதனைகள் நடைபெற்றன.
இது தொடர்பாக முதலில் ட்விட்டரில் பதிவிட்ட ஏர் இந்தியா நிறுவனம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக தரை இறக்கப்பட்டதாக கூறியது. பின்னர் அதை நீக்கிவிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக தரை இறக்கப்பட்டதாக பதிவு செய்தது.

லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் தனியே ஒரு பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. பிரதான விமான நிலையத்தின் பணிகள் எதுவும் பாதிக்கவில்லை என தெரிவித்தது.

இந்நிலையில் ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது. விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து லண்டனில் இருந்து நெவார்க் நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications