முள் உரசினாலே 'தற்கொலை' தான்.. உலகின் மிக ஆபத்தான செடி.. கூண்டில் வைத்து வளர்க்கும் மனிதர்!
லண்டன்: உலகின் மிக ஆபத்தான செடி ஒன்றினை பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நபர் தனது வீட்டில் வளர்த்து வருவது அனைவரையும் அச்சமடையச் செய்துள்ளது.
இந்த செடியிலும், அதன் இலைகளிலும் இருக்கும் சிறிய முட்கள் மிக ஆபத்தானவையாக அறியப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு பாம்பு கடித்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு வலியை இந்த முட்கள் கொடுக்கும் என தாவர விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அதற்கென பிரத்யேகமாக இரும்புக் கூண்டை செய்து அதற்குள் அந்தச் செடியை வைத்து அந்த நபர் வளர்த்து வருகிறார்.

ஆளையே காலி செய்யும் செடிகள்
மனிதர்களில் எவ்வாறு நல்லவர்கள், கெட்டவர்கள் என இருக்கிறார்களோ, செடிகளிலும் இந்த வேறுபாடு இருக்கிறது. மிக மோசமான, ஆபத்தை விளைவிக்கும் செடிகளும் இந்த உலகில் ஏராளமாக இருக்கின்றன. உதாரணமாக, பூச்சிகள், தவளைகள், ஏன் பறவைகளை பிடித்து தின்னும் செடிகளும் இருக்கின்றன. இவற்றில் நம் விரல் மாட்டினாலும் காலி தான். அதேபோல, சில செடிகளின் முட்கள், இலைகளில் உள்ள பசைகள் ஆகியவை மனிதர்களையே கொல்லும் விஷத்தன்மை கொண்டவை.

உலகிலேயே ஆபத்தான செடி
இந்நிலையில், லண்டனைச் சேர்ந்த டேனியல் எமிலின் (44) என்பவர் உலகிலேயே மிக ஆபத்தான செடியாக அறியப்படும் 'ஜிம்பி ஜிம்பி' (Gympy Gympy) என்ற செடியைதான் அவர் வளர்த்து வருகிறார். பெயரை கேட்டால் காமெடியாக இருக்கிறது என நினைக்க வேண்டாம். மிக மோசமான பாதிப்புகளை தரக்கூடிய செடி இது. இந்த செடியின் மீதும், அதன் இலைகள் மீதும் மிக மிகச் சிறிய முட்கள் இருக்கும். இந்த இலைகளையோ அல்லது செடியையோ யாராவது தொட்டால் அவ்வளவுதான். இந்த முட்கள் அவர்களை பதம் பார்த்துவிடும்.

தற்கொலை எண்ணத்தை தூண்டும்..
முள் என்றால் சாதாரணமாக இருக்கும் முள் என நினைத்துவிட வேண்டாம். நல்ல பாம்பு கடித்தால் எப்படி இருக்குமோ, அந்த அளவுக்கு வலியை இந்த முள் தரக்கூடியது. மேலும், பல மாதங்களுக்கு இந்த முள் குத்திய தடிப்புகளும், வலியும் அப்படியே இருக்கும். நாளுக்கு நாள் இந்த வலி அதிகரித்துக் கொண்டே இருக்குமே தவிர குறையாது. மேலும், இந்த முட்களில் உள்ள விஷமானது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியவை. இதனால் இந்த முள் நன்றாக குத்திவிட்டால் மனிதர்களுக்கு தற்கொலை எண்ணம் வந்துவிடும். பலர் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். 10 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை இந்த செடியின் முட்கள் குத்தினால் மரணம் வரை கூட சென்றுவிடும்.

'போர் அடித்ததால் வளர்த்தேன்..'
இந்த அளவுக்கு மோசமான 'ஜிம்பி ஜிம்பி' செடியைதான் டேனியல் எமிலின் வளர்த்து வருகிறார். யாருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூண்டில் வைத்து இந்த செடியை வளர்க்கிறார். மேலும், அந்தக் கூண்டுக்கு வெளியே 'டேஞ்சர்' குறியீடையும் அவர் வைத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, "செடிகளை வளர்ப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சாதாரண செடிகளை வளர்த்து வளர்த்து 'போர்' அடித்துவிட்டது. அதனால், எந்த செடி மிக ஆபத்தான செடி என இணையத்தில் தேடி பார்த்த போது இந்தச் செடிதான் வந்தது. இது ஆஸ்திரேலியாவின் காட்டுப்பகுதிகளில் மட்டுமே இருக்கக்கூடியவை. ஆனால், சில ஆன்லைன்களில் இந்த செடியின் விதைகள் இருந்தன. எனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து இந்தச் செடிகளின் விதைகளை வாங்கினேன்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்!












Click it and Unblock the Notifications