1908ல் மிஸ்ஸானது 2019ல் நடக்கும்.. பூமியை தாக்க வரும் பெரிய விண்கல்.. லண்டன் விஞ்ஞானிகள் அலெர்ட்!
அடுத்த வருடம் பூமியை பெரிய விண்கல் ஒன்று தாக்க வாய்ப்புள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
Recommended Video

லண்டன்: அடுத்த வருடம் பூமியை பெரிய விண்கல் ஒன்று தாக்க வாய்ப்புள்ளதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
கடந்த 1908 பூமியை ஒரு விண்கல் தாக்கியது. 1908 ஜூலை 30ம் தேதி சைபீரியாவில் இந்த விண்கல் விழுந்தது. 800 சதுர அடி நிலப்பரப்பு கொண்டு நிலம் இதனால் நாசமானது.
அப்பார்ட்மெண்ட் அளவில் விழுந்த இந்த எரிகல் நிகழ்வை விஞ்ஞானிகள், ''தி தூங்குஸ்கா நிகழ்வு''' என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் இதனால் யாரும் உயிரிழக்கவில்லை.

மீண்டும் நடக்கும்
இந்த நிலையில் இதே போன்ற நிகழ்வு மீண்டும் நடக்கும் என்று லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த வரும் ஜூன் மாதம் ஒரு பெரிய விண்கல் பூமியை தாக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அளவு எப்படி இருக்கும் என்று தெரியாது என்று கூறியுள்ளனர்.

எப்படி நடந்தது
1908ல் நடந்த நிகழ்வே எப்படி நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அப்போது பூமியை மோதிய விண்கல் எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. இதுவரை மனித வரலாற்றில் நடந்த மிகப்பெரிய விண்கல் தாக்குதல் இதுதான். அதைவிட பெரிய தாக்குதலாக அடுத்த வருட நிகழ்வு இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எப்படி கணித்தார்கள்
அதன்படி லண்டன் விஞ்ஞானிகள் இதில் முக்கியமான விஷயம் ஒன்றையும் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமி மீது விழுந்த நிகழ்வு ஒரு சுழற்சி முறையில் நடக்கிறது. அதனால், பூமி மீது ஜூலை மாதங்களில் கண்டிப்பாக விண்கல் விழ வேண்டும். சுழற்சிப்படி வரும் 2019 ஜூலையில் இந்த சம்பவம் நடக்கும் என்று கணித்துள்ளனர்.

என்ன நடக்க வாய்ப்புள்ளது
ஆனால் இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டிக்கவில்லை. அதேபோல் இந்த விண்கல் பூமி மீது மோதாமல் தவறி செல்லவும் வாய்ப்பும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அடுத்த வருடம் மே மாதத்தில்தான் இந்த விண்கல் பூமியில் மோதுமா, மோதாதா என்பதை விவரமாக சொல்ல முடியும் என்று கூறியுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications