கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் பயண தடை விலக்கு.. ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா முறையீடு
லண்டன் : ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரக்கூடிய தடுப்பூசி பாஸ்போர்ட்டிற்கான விலக்கு பட்டியலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டையும் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
தற்போது ஃபைசர் / பயோஎன்டெக், மாடர்னா, ஆக்ஸ்ட்ராசெனெகா-ஆக்ஸ்போர்டின் வாக்ஸெர்வ்ரியா மற்றும் ஜான்சன் & ஜான்சனின் ஜான்சென் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே பாஸ்போர்ட் விலக்கு பட்டியலில் இருப்பதற்கு ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த நான்கு தடுப்பூசிகளில் ஏதாவது ஒன்றை போடப்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கப்படும் மற்றும் தொற்றுநோய்களின் போது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூலை 1 முதல் ( நாளை) முதல் அமலுக்கு வருகிறது.

நாளை முதல் நடைமுறை
இந்நிலையில் நாளை முதல் நடைமுறைக்கு வரக்கூடிய தடுப்பூசி பாஸ்போர்ட்டிற்கான விலக்கு பட்டியலில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டையும் சேர்க்குமாறு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிடம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஏற்றுக்கொள்வது
ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிகள் குறித்து மத்திய அரசு உயர் அதிகாரிகள் வட்டாரம் கூறும் போது,
"தேசிய அளவில் அல்லது உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதில் தனிப்பட்ட முறையில் நாடுகளுக்கு நெகிழ்வுத்தன்மை உள்ளது,

நாங்களும் ஏற்போம்
இந்தியாவில் வழங்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்றுக்கொள்ளுமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ளோம். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோவிட் சான்றிதழை அங்கீகரிப்பதற்காக இந்தியா ஒரு பரஸ்பர கொள்கையை நிறுவும் என்று நாங்கள் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்தோம். இதேபோல் ஐரோப்பிய ஒன்றியமும் டிஜிட்டல் கோவிட் சான்றிதழ்களில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று இந்திய சுகாதார அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை கேட்டுக்கொண்டார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறின,

கோரிக்கை
ஐரோப்பிய ஒன்றிய டிஜிட்டல் கோவிட் சான்றிதழைக் கொண்டுள்ள அனைவருக்கும் கட்டாயமாக தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிப்பதற்காக விலக்கு அளிப்பார்கள். இந்நிலையில் இத்தாலியில் நடைபெற்ற ஜி 20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை ஒட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஃபோன்டெல்லஸுடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை பேசினார். அப்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கும் பாஸ்போர்ட் விலக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு












Click it and Unblock the Notifications