இந்திய தூதரை வழிமறித்த காலிஸ்தான் தீவிரவாதிகள்! குருத்துவாரா செல்ல விடாமல் ரகளை! பிரிட்டனில் பதற்றம்
லண்டன்: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை விவகாரத்தில் மோதல் தொடரும் நிலையில், திடீரென பிரிட்டனில் இந்தியத் தூதரை வழிமறித்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் ரகளையில் இறங்கியுள்ளனர்.
இந்தியா கனடா இருந்த நல்லுறவு கடந்த சில காலமாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவில் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் என்பவர் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். அடையாளம் தெரியாத சரமாரியாக அவரை சுட்டுக் கொன்றனர்.

இந்த கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் எனக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், ஆதாரங்களை வெளியிடுமாறு வலியுறுத்துகிறது. இருப்பினும், ஆதாரத்தை வெளியிடாமல் இந்தியாவை மட்டும் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டுகிறது.
வழிமறித்து ரகளை: இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மற்றொரு ஷாக் சம்பவம் பிரிட்டனில் நடந்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் விக்ரம் துரைசாமியை ஸ்காட்லாந்து ஆல்பர்ட் டிரைவில் உள்ள கிளாஸ்கோ குருத்வாராவிற்குள் நுழைய விடாமல் தடுப்பது தெளிவாகத் தெரிகிறது.
பெரும் பதற்றம்: பார்கிங் வரை வந்து இவர்கள் எல்லை மீறியுள்ளனர். காருக்குள் விக்ரம் துரைசாமி இருக்க அதன் அருகிலேயே இரு காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதில் ஒருவர் விக்ரம் துரைசாமியின் காரையும் திறக்க முயல்கிறார். இருப்பினும், நல்வாய்ப்பாக அவரது கார் உட்புறம் லாக் செய்யப்பட்டிருந்ததால், காரை திறக்க முடியவில்லை. இல்லையென்றால் மோசமான சம்பவம் நடந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. அதைத் தொடர்ந்து அந்த கார் குருத்வாரா வளாகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
இந்தச் சம்பவத்திற்கும் குருத்வாரா கமிட்டிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை எனக் கூறப்படுகிறது. சொல்லப்போனால் விக்ரம் துரைசாமியை அழைத்ததே குருத்வாரா கமிட்டி தான்.. ஆனால், அங்கிருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் தான் இந்த மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மற்றொரு வீடியோவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குருத்வாரா ஊழியர்களையும் மிரட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது.
புகார்: இந்த விவகாரம் குறித்து இதுவரை இந்தியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்தவொரு அறிக்கையும் இல்லை. இருப்பினும், இது இந்தியத் தூதரின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்குத் தடை இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் இதுபோல வெளிப்படையாகவே இயங்கி வருகின்றனர். பிரிட்டனிலும் கடந்த காலங்களில் இந்து கோயில்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் அவமதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியத் தூதர் ஒருவரையே காலிஸ்தான் பயங்கரவாதிகள் வழிமறித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications