வந்தாச்சு மாத்திரை.. கொரோனாவுக்கு நோ ஊசி.. நோ மருந்து.. முதல்நாடாக அனுமதி தந்தது பிரிட்டன்..!
கொரோனாவுக்கு மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்
லண்டன்: கொரோனாவுக்கு மாத்திரை வந்தாச்சு.. அதை பற்றிதான் உலக நாடுகள் பரபரப்பாக பேசி வருகின்றன.
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பரவி விட்டது.. இந்த வைரஸை எதிர்கொள்ள எந்தவித மருந்தும், சிகிச்சையும் கண்டுபிடிக்கவில்லை.
அதற்கான முயற்சியில் கடந்த 2 வருடங்களாகவே லட்சக்கணக்கான டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆறுதல்
இப்போதைக்கு தடுப்பூசிகள் மட்டும்தான் நமக்கு ஒரே ஆறுதலாகவும், தடுப்பாகவும் இருந்து வருகிறது.. அந்த தடுப்பூசிகளிலும் பல்வேறு வகைகளை கண்டுபிடித்து, அதுகுறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல் முறையாக இந்த கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இது தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு இது சிறந்த ஊக்கத்தை அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மருந்து
மெர்க்ஸ் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெராபியூட்டிக்ஸ் இணைந்து இந்த மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர்.. இதற்கு 'மால்னுபிரவிர்' என்று பெயர்.. உலக அளவில் முதல் முறையாக கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு இந்த மாத்திரை, கேம் சேஞ்சராக இருக்கும் என்று பிரிட்டன் கூறியுள்ளது.. மேலும் அந்த மாத்திரையை தங்கள் நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதியும் தந்துள்ளது.
Recommended Video

தடுப்பூசிகள்
எத்தனையோ பேருக்கு தடுப்பூசிகள் மீது இதுவரை நம்பிக்கை வரவில்லை.. அதனால் பலர் இன்றைய நாள் வரை தடுப்பூசிகளையும் செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள்.. இப்படிப்பட்டவர்களுக்கு ஒருவேளை மாத்திரை நம்பகத்தன்மையை ஏற்படுத்துமா? மாத்திரைகள் எளிதாக விழுங்கக்கூடியவை என்பதால், அதற்கு வருங்காலத்தில் வரவேற்பு அதிகரிக்குமா? என்றெல்லாம் தெரியவில்லை.

நம்பிக்கை
ஆனால், இந்த மாத்திரையை உட்கொண்டால், உடலில் வைரஸ் பரவல் கடுமையாவது தடுக்கப்படும் என்று கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாம். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானவுடன் அல்லது அறிகுறி தோன்றியவுடன் இந்த மாத்திரையை தொடர்ந்து 5 நாட்களுக்கு தினம் 2 வேளையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள்..

நம்பிக்கை
இதை உட்கொள்வதால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபடாமலேயே இது ஒருவரை காக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அந்நிறுவனத்தை சார்ந்தவர்கள். ஒருவேளை பிரிட்டன் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டால் உலக நாடுகளும் இதேபோன்ற மாத்திரையை நோக்கி பயணப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications