நிர்வாணப்படுத்தி.. சிறுநீரை குடிக்க வைத்து இந்துக்கள் 2 பேரை கடத்தி சித்ரவதை செய்த கும்பல் - பகீர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்விரோதத்தில் 2 இந்து இளைஞர்களை காரில் கடத்திய கும்பல் அவர்களை நிர்வாணப்படுத்தி தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டம் ராம்கான் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் சந்தன் மவுரியா. இவர் தனது உறவினர் மோஹித் மற்றும் நண்பர் அன்னு ஆகியோரடன் பிறந்தநாள் விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பைகா கிராமத்தை சேர்ந்த சகாபூதின் என்பவர் 2 பேருடன் வந்து வழிமறித்தனர். அதன்பிறகு அனாஸ், ஜிஜான் ஆகியோர் சகாபூதினுடன் கைகோர்த்தனர். இவர்கள் 5 பேரும் சேர்ந்து சந்தன் மவுரியா மற்றும் மோஹித் ஆகியோரை தாக்கி காரில் கடத்தினர்.
அதன்பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சந்தன் மவுரியா, மோஹித் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். இரும்பு கம்பி, உருட்டு கட்டையை வைத்து கொடூரமாக தாக்கினர். இதனால் இருவரும் கதறினர். குடிக்க தண்ணீர் கேட்டும் அவர்கள் வழங்காமல் கொடூரமாக தாக்கினார். தொடர்ந்து தண்ணீர் கேட்டு கதறியதால் அவர்கள் சிறுநீரை குடிக்க வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி துப்பாக்கியை காட்டி மிரட்டி ‛இஸ்லாம் ஜிந்தாபாத்' என கோஷமிட வைத்துள்ளனர். அதன்பிறகு அவர்களை விட்டு சென்றனர். புகாரளித்த சந்தன் தரப்பில், ‛‛இந்து பெண்களை குறிவைத்த இன்ஸ்டாகிராமில் ஒரு கும்பல் வலைவிரிக்கிறது. இதற்காக பாபா குரூஅப் என்ற குழு செயல்படுகிறது.
இதில் பலரும் இந்து என்று கூறி இந்து பெண்களை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இவர்களில் பலரும் விலையுயர்ந்த கார்கள், பொருட்களை வைத்துள்ளனர்'' என்றார். சந்தன் மவுரியா சார்பில் ராம்கான் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி துர்கா பிரசாத் திவாரி கூறுகையில், ‛‛முதற்கட்ட விசாரணையில் இருதரப்புக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வழக்குப்பதிவு செய்து கொண்டனர். சகாபூதீன், அனாஸ், ஜிஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதம்சார்ந்த கோஷம் எழுப்ப கூறியதாக சொல்லப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. இதுபற்றியும் விசாரித்து வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications