மயானத்திலிருந்து துணிகளை திருடி.. புதிய ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் விற்பனை.. உ.பி-இல் செம ஷாக்
லக்னோ: மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பாக்பாத் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்கள் உடல்களிலிருந்து உடைகளை இருந்து திருடிய 7 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு வரும் மே மாதம் 17ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது.

இந்நிலையில், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் பாக்பாத் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இறந்தவர்கள் உடல்களிலிருந்து உடைகளை இருந்து திருடிய 7 பேர் அம்மாநில போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சுடுகாட்டிலிருந்து படுக்கை விரிப்புகள், புடவைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்ததுள்ளது. மேலும், போலீசார் அவர்களிடம் இருந்து 520 பெட்ஷீட்கள், 127 குர்தாக்கள், 52 புடவைகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
அவர்கள் திருடும் துணிகளைத் துவைத்து, சலவை செய்து ஏதேனும் நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி மீண்டும் பொதுமக்களிடம் விற்பனை செய்து விடுகிறார்கள். இதற்காக அப்பகுதியில் இருக்கும் சில ஆடை வியாபாரிகள் திருடர்கள் ஒரு நாளைக்கு 300 ரூபாயை வழங்குவதாகவும் காவல்துறை தெரிவித்தனர்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் மீது திருட்டு வழக்கு மட்டுமின்றி பெருந்தொற்று வழக்கும் பதிவு செய்யப்படும் என்றனர்.












Click it and Unblock the Notifications