அப்படியே சரிந்து விழுந்த மூன்று மாடி கட்டிடம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் இந்த விபத்து நடந்திருக்கிறது. மீரட்டின் ஜாகிர் நகர் பகுதியில் நேற்று மாலை 5.50 மணியளவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த வீடு பால் பண்ணையாருக்கு சொந்தமானதாகும். விபத்து நடந்த உடன், மீட்பு பணிகளுக்காக போலீசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவர்கள் தவிர மேலும் 4 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், 12 எருமை மாடுகளும் விபத்தில் சிக்கியுள்ளதாகவும் மீட்பு படையினர் கூறியுள்ளனர். விபத்து நடந்த இடம் குறுகலான பகுதி என்பதால், அப்பகுதிக்குள் ஜேசிபி போன்ற மீட்பு வாகனங்கள் உடனடியாக உள்ளே வர முடியாமல் தவித்திருக்கின்றன. எனவே நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படையினரும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் கூறுகையில், "விபத்து நடந்த கொஞ்ச நேரத்திலேயே நாங்கள் இந்த பகுதிக்கு வந்துவிட்டோம். மொத்தம் 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்ததாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளனர்.
கட்டிட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications