உ.பி கான்பூரில் கோர விபத்தில் சிக்கிய பேருந்து.. 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி.. 4 பேர் படுகாயம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த கோர விபத்தில் 17 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள சச்சேந்தி என்ற பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து ஒன்று லோட் ஏற்றும் மூன்று சக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்து வேகமாக வந்து மோதியதில், கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாகிவிட்டனர். 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் தற்போது ஹல்லேட் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து லக்னோவில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டு இருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்கிறார்கள்.
இந்த விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்திற்கு, பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக அளித்துள்ளார். அதேபோல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பலியான நபர்களுளின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.